சென்னை, மே.19 – தமிழ்நாட்டில் அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கை பெருமளவு சரிந்துள்ளது. மொத்த முள்ள 5,544 அய்.ஏ. எஸ். அதிகாரிகளில் 248 பேர் மட்டுமே தமிழர்கள் உள்ளனர்.
தலைமை பொறுப்பு
இந்தியாவில் நடைபெறும் கடினமான தேர்வுகளில் முதன்மையானது ஒன்றிய அரசு பணியாளர் தேர் வாணையம் நடத்தும் குடிமை பணித்தேர்வுகள்தான். இதில் வெற்றி பெறுபவர்கள்தான் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ் உள்பட அரசின் உயர் பணியிடங்களுக்கு நியமிக்கப்படு கின்றனர். இந்திய ஆட்சி பணி என்று சொல்லப்படும் அய்.ஏ.எஸ். ஆகவேண்டும் என்பது பலரின் கனவாகும்.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பேர் எழுதும் இந்த தேர்வில் வெற்றி பெறுவது சில நூறு பேர் மட்டும் தான். ஒரு துறையின் தலைமை பொறுப்பை ஏற்பதும். மாவட்டத்தின் தலைவராக இருப்பதும் அய்.ஏ.எஸ். அதி காரிகள்தான். அய்.ஏ.எஸ். தேர்ச்சி பெறுபவர்கள் முதலில் சார்பு செயலாளர்கள் பதவியில் பணியில் சேரு கின்றனர். அதன்பின் அவர்கள் துணை செயலாளர்கள், இணை செயலாளர்கள், செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், கூடுதல் செயலாளர்கள் என்று பல்வேறு பொறுப்புகளை வகிக்கின்றனர்.
உத்தரப்பிரதேசம்
ஒவ்வொரு மாநிலத்திற்கும் எத்தனை அய்.ஏ.எஸ்.அதிகாரிகள் இருக்க வேண்டும் என்பதை ஒன்றிய அரசு தீர்மானிக்கிறது. அதன் அடிப்படையில் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றனர். இந்தியா வில் தற்போது 5 ஆயிரத்து 544 அய்.ஏ.எஸ்.அதிகாரிகள் உள்ளனர். அதில் அதிக அய்.ஏ. ஏஸ். அதிகாரிகள் ஒதுக்கீடு பெற்ற மாநிலமாக உத்தரப்பிரதேசம் திகழ்கிறது. அங்கு தற்போது 574 அய்.ஏ. எஸ். அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். அதற்கு அடுத்தபடியாக மத்தியப் பிரதேசத்தில் 393 பேரும், மராட்டியத்தில் 348 பேரும் பணியாற்றுகின்றனர். 4ஆவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
தமிழ்நாட்டில் 333 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். அதில் 40 பேர் தமிழர்கள். 193 பேர் பிற மாநிலத்தவர்கள். அதில் கேரளாவை சேர்ந்த 28 பேர் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் 23 பேர் உள்ளனர்.
அதிக மதிப்பெண்
அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுபவர்கள் தாங்கள் விரும்பும் மாநிலத்தில் பணியாற்றுவதற்கு மண்டல வாரியாக வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் அவர்களைத் தேர்வு செய்யும் மாநிலங்களில் பணிபுரியலாம். அதாவது ஒரு மண்டலத்தில் உள்ள ஒரு மாநிலத்தை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். அதிக மதிப்பெண் பெற்றிருந்தால் சொந்த மாநிலத்தில் பணிபுரியும் வாய்ப்பு எளிதாக கிடைக்கும். இல்லாவிட்டால் வேறு மாநிலங்கள்தான்.
கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறும் சதவீதம் குறைவாக இருக்கிறது. அதனால் தமிழ் அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்துள்ளது.
பெருமளவு சரிவு
நாட்டில் மொத்தமுள்ள 5 ஆயிரத்து 544 அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் 248 பேர்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை 300-க்குமேல் இருந்தது. ஆனால், தற்போது அதில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் உத்தரப்பிரதேசம். பீகார், மராட்டியம், ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய மாநிலத்தவர்கள் அதிகம் பேர் தற் போது அய்.ஏ.எஸ். ஆக உள்ளனர். தமிழ்நாடு அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகம் இருக்க வேண்டுமென்றால், தமிழர்கள் அதிக எண்ணிக் கையில் அய்.ஏ.எஸ். தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அப்போதுதான் இந்த சரிவில் இருந்து நாம் மீள முடியும்.
முதல் 10 இடம்
தமிழ்நாட்டில் உள்ள 248 அய்.ஏ.எஸ், அதிகாரிகளில் முதல் 10 பேரில் 4 பேர் ஒன்றிய அரசு துறையில் இருக் கின்றனர். தமிழ்நாடு ஒதுக்கீடு பிரிவு அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் மிகவும் சீனியராக இருப்பவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் வர்மாதான், அவர் தற்போது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக சேர்மனாக இருக்கிறார். இவர் 1986ஆம் ஆண்டு அய்.ஏ.எஸ். ஆனவர். இவருக்கு அடுத்த இடத்தில் டி.வி.சோமநாதன் (தமிழ்நாடு) இருக்கிறார். இவர் ஒன்றிய அரசின் நிதித் துறை செயலாளராக பணியாற்றுகிறார். இவரது கையெழுத்துதான் ஒரு ரூபாய் நோட்டில் இருக்கும். 3ஆவது இடத்தில் அண்ணா மேலாண்மை கல்லூரி இயக்குநர் விக்ரம் கபூர் (பஞ்சாப்), 4ஆவது இடத்தில் விளையாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா (உத்தரப்பிரதேசம்), 5ஆவது இடத்தில் ஒன்றிய அரசின் தகவல் தொழில் நுட்ப செயலாளராக பணியாற்றும் கிருஷ்ணன் (தமிழ்நாடு), 6ஆவது இடத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் எஸ்.கே.பிரபாகர் (தமிழ்நாடு), 7ஆவது இடத்தில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா (மத்தியப் பிரதேசம்), 8ஆவது இடத்தில் ஒன்றிய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில் துறை செயலாளர் அனிதா பிரவீன் (பீகார்), 9ஆவது இடத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாலர் சிவ் தாஸ் மீனா (ராஜஸ்தான்), 10ஆவது இடத்தில் ஒன்றிய அரசின் பழங்குடியினர் விவகாரத்துறை செயலாளரான விபுநாயர் (உத்தரப் பிரதேசம்) ஆகியோர் உள்ளனர்.
‘நான் முதல்வன்’, வழிகாட்டுகிறது
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் அய்.ஏ.எஸ். தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான ‘நான் முதல்வன்’ திட் டத்தின் கீழ் பல்வேறு வசதிகளை செய்து தருகிறது. அய்.ஏ.எஸ். முதன்மை தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் அய்.ஏ.எஸ். தேர் வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மதிப்பீடு தேர்வு மூலம் மாதந்தோறும் ரூ.7 ஆயிரத்து 500 வழங்கப் படுகிறது.