Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: தமிழ்நாட்டில் அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கை பெரும் சரிவு வழிகாட்டும் நான் முதல்வன் திட்டம்
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கை பெரும் சரிவு வழிகாட்டும் நான் முதல்வன் திட்டம்

Last updated: May 19, 2024 3:26 pm
Published: May 19, 2024
தமிழ்நாடு
SHARE

சென்னை, மே.19 – தமிழ்நாட்டில் அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கை பெருமளவு சரிந்துள்ளது. மொத்த முள்ள 5,544 அய்.ஏ. எஸ். அதிகாரிகளில் 248 பேர் மட்டுமே தமிழர்கள் உள்ளனர்.

தமிழ்நாடு

தலைமை பொறுப்பு
இந்தியாவில் நடைபெறும் கடினமான தேர்வுகளில் முதன்மையானது ஒன்றிய அரசு பணியாளர் தேர் வாணையம் நடத்தும் குடிமை பணித்தேர்வுகள்தான். இதில் வெற்றி பெறுபவர்கள்தான் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ் உள்பட அரசின் உயர் பணியிடங்களுக்கு நியமிக்கப்படு கின்றனர். இந்திய ஆட்சி பணி என்று சொல்லப்படும் அய்.ஏ.எஸ். ஆகவேண்டும் என்பது பலரின் கனவாகும்.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பேர் எழுதும் இந்த தேர்வில் வெற்றி பெறுவது சில நூறு பேர் மட்டும் தான். ஒரு துறையின் தலைமை பொறுப்பை ஏற்பதும். மாவட்டத்தின் தலைவராக இருப்பதும் அய்.ஏ.எஸ். அதி காரிகள்தான். அய்.ஏ.எஸ். தேர்ச்சி பெறுபவர்கள் முதலில் சார்பு செயலாளர்கள் பதவியில் பணியில் சேரு கின்றனர். அதன்பின் அவர்கள் துணை செயலாளர்கள், இணை செயலாளர்கள், செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், கூடுதல் செயலாளர்கள் என்று பல்வேறு பொறுப்புகளை வகிக்கின்றனர்.

உத்தரப்பிரதேசம்
ஒவ்வொரு மாநிலத்திற்கும் எத்தனை அய்.ஏ.எஸ்.அதிகாரிகள் இருக்க வேண்டும் என்பதை ஒன்றிய அரசு தீர்மானிக்கிறது. அதன் அடிப்படையில் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றனர். இந்தியா வில் தற்போது 5 ஆயிரத்து 544 அய்.ஏ.எஸ்.அதிகாரிகள் உள்ளனர். அதில் அதிக அய்.ஏ. ஏஸ். அதிகாரிகள் ஒதுக்கீடு பெற்ற மாநிலமாக உத்தரப்பிரதேசம் திகழ்கிறது. அங்கு தற்போது 574 அய்.ஏ. எஸ். அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். அதற்கு அடுத்தபடியாக மத்தியப் பிரதேசத்தில் 393 பேரும், மராட்டியத்தில் 348 பேரும் பணியாற்றுகின்றனர். 4ஆவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
தமிழ்நாட்டில் 333 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். அதில் 40 பேர் தமிழர்கள். 193 பேர் பிற மாநிலத்தவர்கள். அதில் கேரளாவை சேர்ந்த 28 பேர் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் 23 பேர் உள்ளனர்.

Also read

தமிழ்நாடு
அதிர்ச்சித் தகவல் அறுபது விழுக்காடு பேர் அதீத வெப்பம் சார்ந்த பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வில் தகவல்
ஜூலை 15ஆம் அரசுப் பள்ளி மாணவர்களுடன் காணொலியில் முதலமைச்சர் கலந்துரையாடுகிறார்

அதிக மதிப்பெண்
அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுபவர்கள் தாங்கள் விரும்பும் மாநிலத்தில் பணியாற்றுவதற்கு மண்டல வாரியாக வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் அவர்களைத் தேர்வு செய்யும் மாநிலங்களில் பணிபுரியலாம். அதாவது ஒரு மண்டலத்தில் உள்ள ஒரு மாநிலத்தை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். அதிக மதிப்பெண் பெற்றிருந்தால் சொந்த மாநிலத்தில் பணிபுரியும் வாய்ப்பு எளிதாக கிடைக்கும். இல்லாவிட்டால் வேறு மாநிலங்கள்தான்.
கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறும் சதவீதம் குறைவாக இருக்கிறது. அதனால் தமிழ் அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்துள்ளது.

பெருமளவு சரிவு
நாட்டில் மொத்தமுள்ள 5 ஆயிரத்து 544 அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் 248 பேர்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை 300-க்குமேல் இருந்தது. ஆனால், தற்போது அதில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் உத்தரப்பிரதேசம். பீகார், மராட்டியம், ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய மாநிலத்தவர்கள் அதிகம் பேர் தற் போது அய்.ஏ.எஸ். ஆக உள்ளனர். தமிழ்நாடு அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகம் இருக்க வேண்டுமென்றால், தமிழர்கள் அதிக எண்ணிக் கையில் அய்.ஏ.எஸ். தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அப்போதுதான் இந்த சரிவில் இருந்து நாம் மீள முடியும்.

முதல் 10 இடம்
தமிழ்நாட்டில் உள்ள 248 அய்.ஏ.எஸ், அதிகாரிகளில் முதல் 10 பேரில் 4 பேர் ஒன்றிய அரசு துறையில் இருக் கின்றனர். தமிழ்நாடு ஒதுக்கீடு பிரிவு அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் மிகவும் சீனியராக இருப்பவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் வர்மாதான், அவர் தற்போது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக சேர்மனாக இருக்கிறார். இவர் 1986ஆம் ஆண்டு அய்.ஏ.எஸ். ஆனவர். இவருக்கு அடுத்த இடத்தில் டி.வி.சோமநாதன் (தமிழ்நாடு) இருக்கிறார். இவர் ஒன்றிய அரசின் நிதித் துறை செயலாளராக பணியாற்றுகிறார். இவரது கையெழுத்துதான் ஒரு ரூபாய் நோட்டில் இருக்கும். 3ஆவது இடத்தில் அண்ணா மேலாண்மை கல்லூரி இயக்குநர் விக்ரம் கபூர் (பஞ்சாப்), 4ஆவது இடத்தில் விளையாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா (உத்தரப்பிரதேசம்), 5ஆவது இடத்தில் ஒன்றிய அரசின் தகவல் தொழில் நுட்ப செயலாளராக பணியாற்றும் கிருஷ்ணன் (தமிழ்நாடு), 6ஆவது இடத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் எஸ்.கே.பிரபாகர் (தமிழ்நாடு), 7ஆவது இடத்தில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா (மத்தியப் பிரதேசம்), 8ஆவது இடத்தில் ஒன்றிய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில் துறை செயலாளர் அனிதா பிரவீன் (பீகார்), 9ஆவது இடத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாலர் சிவ் தாஸ் மீனா (ராஜஸ்தான்), 10ஆவது இடத்தில் ஒன்றிய அரசின் பழங்குடியினர் விவகாரத்துறை செயலாளரான விபுநாயர் (உத்தரப் பிரதேசம்) ஆகியோர் உள்ளனர்.

‘நான் முதல்வன்’, வழிகாட்டுகிறது
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் அய்.ஏ.எஸ். தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான ‘நான் முதல்வன்’ திட் டத்தின் கீழ் பல்வேறு வசதிகளை செய்து தருகிறது. அய்.ஏ.எஸ். முதன்மை தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் அய்.ஏ.எஸ். தேர் வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மதிப்பீடு தேர்வு மூலம் மாதந்தோறும் ரூ.7 ஆயிரத்து 500 வழங்கப் படுகிறது.

Ad imageAd image
கன்னியாகுமரியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு கொடியேற்றுவிழா
தோஷங்களை நீக்குவதாகக் கூறும் ஆம்பூர் நாகநாதசுவாமி கோவிலில் பெண்ணிடம் பாலியல் சீண்டல் வன்கொடுமை செய்த அர்ச்சகர் கைது
கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அரசு மேற்கொண்ட முக்கிய நடவடிக்கை
கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலைய பணிகள் தீவிரம் ஜூலைக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டம்
வதந்திகளை நம்ப வேண்டாம் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கடந்த அய்ந்து நாள்களில் பேருந்துகளில் ஆறு லட்சம் பேர் பயணம் விரைவுப் போக்குவரத்து கழகம் தகவல்
TAGGED:'நான் முதல்வன்' திட்டம்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?