காஞ்சிபுரம், மே 19- சென்னையில் பொறியியல் மாணவர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 3 லட்சம் பணத்தை இழந்து, விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ராமையா புகலா (வயது 21) என்பவர், காஞ்சிபுரம் மாவட் டத்தில் உள்ள சிறீபெரும்புதூர் அடுத்த தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இவர் அங்கு கல்லூரி விடுதியில் தங்கி இருந்து படித்து வருகிறார். ராமையா புகலா, ஆன்லைன் சூதாட்டத்தில் (Online Gambling) அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார்.
இதனால், தன்னுடன் படிக்கும் சக மாணவர்களிடம் ரூ.3 லட்சம் வரை கடனாக வாங்கி, அதனை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். இதன்காரணமாக, இவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில், விடுதி யில் உள்ள அறைக்கு சென்று, அங்கு அவர் தூக்குப்போட்டு தற் கொலை செய்துகொண்டுள்ளார். பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சிறீபெரும்புதூர் காவல்துறையினர், ராமையா புக லாவின் உடலை கைப்பற்றி உடற் கூராய்விற்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண் டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது. மேலும், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, தொடர்ந்து இதுபோன்ற சம்ப வங்கள் அடுத்தடுத்து நடந்து வரு வது குறிப்பிடத்தக்கதாகும்.