பாலஸ்தீனத்திற்கு இந்தியா அனுப்பிய உதவிப்பொருட்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைப்பு

1 Min Read

காஸா, நவ.20 இந்தியா அனுப்பிய உதவிப் பொருட்கள் ரெட் கிரஸண்ட் அமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பல ஆண்டுகளாக பாலஸ்தீனம் மீது தொடர்ந்து சிறு சிறு தாக்குதலை நடத்திவந்த இஸ்ரேல்  நவம்பர் மாதம் 7-ஆம் தேதி, முதல் பாலஸ் தீனத்தின் காசா பிராந்தியத்தில் தொடர் தாக்குதல் நடத்தி   வருகிறது. 

காசா மீது தரைவழியாகவும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வரு கிறது. ஹமாஸ்-_இஸ்ரேல் இடையே யான போரால் காசாவில் 11 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாலஸ் தீனர்கள் பலியாகினர். ஆயிரக்கணக் கானோர் காயம்டைந்துள்ளனர் காசா நகரை சுற்றி வளைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், காசாவில் மனிதாபிமான நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கும் மக்கள் அல்லல்படும் சூழல் உள்ளது. 

ஆனால், இஸ்ரேல் ராணுவம் முழு வீச்சில் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் காசா முற்றிலும் நிலைகுலைந்து இருக்கிறது. 

இந்த நிலையில் பாலஸ்தீன மக்களுக்காக இந்திய அரசு மனி தாபிமான உதவிகளை அனுப்பி வருகிறது. முன்னதாக மருந்துகள், குடில்கள், நீர் சுத்திகரிப்பு மாத் திரைகள், தார்ப்பாய்கள் உள்பட மொத்தம் 38 டன் எடை கொண்ட உதவிப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை இந்தியா அனுப்பியிருந்தது. 

இதைத் தொடர்ந்து இந்தியா அனுப்பிய 32 டன் எடை கொண்ட 2-ஆவது தொகுதி உதவிப் பொருட் கள் தற்போது எகிப்து சென்ற டைந்துள்ளன. 

இதுகுறித்து இந்திய வெளியுற வுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்ஷி வெளியிட்டுள்ள பதிவில், “பாலஸ்தீன மக்களுக்காக இந்தியா அனுப்பிய மனிதாபிமான உதவிப் பொருட்கள் எகிப்து சென்று சேர்ந்துள்ளன. அங்குள்ள ரெட் கிரஸண்ட் அமைப்பினரிடம் இந்த உதவிப் பொருட்கள் ஒப்படைக் கப்பட்டுள்ளன” என்று பதிவிட் டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *