திருப்பத்தூர், மே 19 திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ‘விடுதலை’ நாளிதழுக்கு சந்தா சேர்ப்பு குறித்த கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் கே.சி. எழிலரசனின் தந்தை பெரியார் இல்லத்தில் நேற்று (18.05.2024) மாலை 5.30 மணி அளவில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு திருப்பத்தூர் மாவட்ட கழக தலைவர் கே. சி. எழிலரசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பெ. கலைவாணன் வரவேற்றார். மேலும் மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர் சி. தமிழ்ச்செல்வன், மாவட்ட ப.க. செயலாளர் வே. அன்பு, மாவட்ட விடுதலை வாசகர் வட்டத் தலைவர் ஞான பிரகாசம், விடுதலை வாசகர் வட்ட செயலா ளர் வ.புரட்சி, விடுதலை வாசகர்வட்ட அமைப்பாளர் எம்.என்.அன்பழகன், நகர தலைவர் காளிதாஸ், கந்திலி ஒன்றிய தலைவர் பெ. ரா. கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் கழக பொறுப்பாளர்கள் இராஜேந் திரன் சோலையார்பேட்டை நகர அமைப்பாளர், ரா.நாகராசன் கந்திலி ஒன்றிய செயலாளர், அ. விஜயா அன்பழகன் மாவட்ட அமைப்பாளர் மகளிரணி, இரா. கற்பகவல்லி மாவட்ட தலைவர் மகளிர் பாசறை, சி. சபரிதா மாவட்ட செயலாளர் மகளிர் பாசறை, தி. நவநீதம் மாவட்ட அமைப்பாளர் மகளிர் பாசரை, குமரவேல் மாவட்ட செயலாளர் ப. ஆசிரியரணி, அ. குமணன் மாவட்ட அமைப்பாளர் ப. ஆசிரியரணி, ஜெ. ரவி. மாவட்ட அமைப்பாளர் ப. ஆசிரியரணி, ஆர். பன்னீர் மாவட்ட செயலாளர் தொழிலாளரணி, கே. மோகன் மாவட்ட அமைப்பாளர் தொழிலாளரணி, குமரவேல் மாவட்டச் செயலாளர் விடுதலை வாசகர் வட்டம், பெருமாள்சாமி மாவட்ட துணைச்செயலாளர் விடுதலை வாசகர் வட்டம், ஆ. ப. செல்வராஜ் மாவட்ட துணை அமைப்பாளர் விடுதலை வாசகர் வட்டம், சிவக்குமார் நகரதலைவர் சோலையார் பேட்டை, யி.வி.றி. வள்ளுவன் நகர அமைப்பாளர் சோலையார் பேட்டை, லட்சுமணன் சோலையார்பேட்டை பொறுப்பாளர், மு. வெற்றி மாதனூர் ஒன்றிய தலைவர், ரவி ஆம்பூர் நகர தலைவர், இளங்கோ ஆம்பூர், ராஜ சேகர் கிரி சமுத்திரம் கிளை தலைவர், நக்கி நாயக்கன்பட்டி கிளை தலைவர் சரவணன் மற்றும் சிவா கழக பொறுப்பாளர் , ஜிவ ரத்தினம் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்த்தின் முன்னதாக தந்தை பெரியார் அவர்கள் என்ன நோக்கத்திற்காக இயக்கம் ஆரம்பித்தாரோ, அந்த நோக்கம் நிறைவேற்றும் வகையில், நம் கழக தோழர்களின் பிள்ளைகள் நடந்த முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பனி ரெண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதின் பொருட்டு அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பாராட்டப்பட்டோர், பெரியகரம் கிளைக் கழகத் தலைவர் பெருமாள் அவர்களின் மகள் அன்புச் செல்வி 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் 475, நடுப்பட்டு ஆசிரியர் பழனி மங்களா ஆகியோரின் மகள் புகழ் நிலவன். அவர் பெற்ற மதிப்பெண் 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் 477.
மாநில அளவில் முதலிடம் பிடித்த செங்கப்பட்டி சார்ந்த கு. தேவதர்ஷினி இவர் பெற்ற மதிப்பெண் 500-க்கு 499. இவருடைய பெற்றோர் குணசேகரன்- சுதா ராணி ஆகியோர் இருவரும் விடுதலை வாசகர்கள், தந்தை பெரியார் பற்றா ளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி பயின்ற பூவித்தா 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் 497.இவர் மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றவர். இவருடைய ஆசிரியர் கோ. திருப்பதி மாவட்ட ஆசிரியரனி தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் பயிற்சி, ஊக்க தின் காரணமாக இந்த மதிப்பெண் பெற்றார். இதனை பாராட்டும் வகையிலும், அவரை சிறப்பிக்கும் வகையில் மாவட்ட தலைவர் சிறப்பு ஊக்கத்தொகையை ஆசிரியர் கோ. திருப்பதிக்கு வழங்கினார். அதே போல் நாங்குநேரி சார்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவன் சின்னதுரையை, சக மாணவர்கள் அவர் நன்றாக படிக்கிறார் என்பதற்காக தாக்கினார்கள், அவர் படு காயம் அடைந்த நிலையிலும் தேர்வு எழுதி +2 தேர்வில் 469 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்தார். கல்வி அறிவாயுதம் கொண்டு ஜாதி வெறியர்களுக்குப் பதில் சொல்லி, அவர்களை யும் படிக்கச் சொன்ன சின்ன துரை – நம் குழந்தைகளுக்கு முன்னுதாரணம் என்று அவருக்கும் பாராட்டு தெரிவிக்கப் பட்டது.
பிறகு கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கம் குறித்து தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் கருத்துரை வழங்கினார். அவர் தன்னுரையில் தந்தை பெரியார் அவர் கள், குடிஅரசு நாளிதழ் அதன் நீட்சியான ‘விடுதலை’ நாளிதழ் ஆரம்பித்ததின் நோக்கம், அதனால் சமூகத்தில் ஏற்ப்பட்ட மாற்றம். அந்த சமூக மாற்றத்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து விளக்கினார். கழக தோழர்கள் அனைவரும் அதிகம் சந்தாக்களை சேர்த்து
ஜூன் மாதம் ஆசிரியர் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.
மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன் தனது தலைமை உரையில் என் தந்தை கே. கே. சின்னராசு அவர்கள் ஆரம்ப காலத்தில் பீடி சுற்றும் தொழிலாளியாக வாழ்க்கை ஆரம்பித் தவர். பிறகு தந்தை பெரியார் கொள்கையை ஏற்றுக் காரணத் தாலும், அவர் கொள்கையை சுமந்து வரும் ‘விடுதலை’ வாசிப்பு அதனால் ஏற்பட்ட தெளிவு அதனால் எங்கள் குடும்பம் இந்த நிலைக்கு முன்னேறி, மூன்றாம் தலைமுறை யாக இந்த இயக்கத்தில் பயனிக்கிறோம் என்றார்.
நிறைவாக சிறப்பு அழைப்பாளர் அண்ணா சரவணன் மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர் நிறைவுரையாற்றினார். அவர் தன் உரையில் கழக தோழர்கள் தன் உறவினர்கள், தோழமை இயக்கத்தை சார்ந்த தோழர் களை சந்தித்து , சந்தாக்களை சேர்க்கும் போது கையுடன் விடுதலை பத்திரிக்கை களை கொண்டு சென்று அதில் வரும் தோழமை இயக்க செய்திகளை சுட்டிக்காட்டியும், வெறும் கடவுள் மறுப்பு மட்டும் இயக்கத்தின் நோக்கமல்ல, சமூக சமத்துவத்திற்கான போராடும் இயக்கம் தான் திராவிடர் கழகம். அதன் தத்துவத்தை சுமந்து வரும் பத்திரிகை தான் விடுதலை பத்திரிகை என்பதை எடுத்துச் சொல்லி சந்தாக் களை சேர்க்க வேண்டும் என்றார். ஆசிரியர் அவர்கள் தன் 92 வயதிலும் தந்தை பெரியார் அவர்களை போன்றே, கொண்ட கொள்கைக்காக ஓய்வறியாமல் உழைக்கிறார். அவரின் உழைப்பில் பாதி அளவாவது நாம் ‘விடுதலை’ சந்தா சேர்ப்பதில் செலுத்தி அதிக சந்தாக்களை சேர்ப்போம் என்றார்.
இந்நிகழ்வில் ‘விடுதலை’ சந்தாக்களை பெற்று தருவதாக உறுதி அளித்த தோழர்கள் மாவட்ட செயலாளர் பெ. கலைவாணன் – 15 , மாவட்ட விடுதலை வாசகர் வட்ட தலைவர் ஞான பிரகாசம் – 5 , மாவட்ட விடுதலை வாசகர் வட்ட செயலாளர் வ. புரட்சி – 5, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சி. தமிழ்ச்செல்வன் – 10, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வே. அன்பு – 10, நகர தலைவர் காளிதாஸ் – 10 , விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் எம். என் அன்பழகன் விஜயா – 10, கந்திலி ஒன்றிய தலைவர் பெ. ரா. கனகராஜ் – 10 , மாவட்ட ஆசிரியரனி தலைவர் கோ. திருப்பதி – 10, நகர இளைஞரணி செயலாளர் அக்ரி அரவிந்த் – 10, மாவட்ட ஆசிரியரணி செயலாளர் குமரவேல் – 5, நக்கி நாயக்கன்பட்டி கிளை தலைவர் சரவணன் – 5, மாவட்ட மகளிர் பாசரை தலைவர் இரா. கற்பகவல்லி – 5, மாதனூர் ஒன்றிய தலைவர் வெற்றிச் செல்வன் – 5, மாவட்ட தொழிலாரணி செயலாளர் மோகன் – 5, கழக பொறுப்பாளர் ஜிவ ரத்தினம் – 5, என்று மொத்தம் 125 சந்தாக்களை வழங்குவதாக அறிவித்தனர். மேலும் பல கழக தோழர்கள் எண்ணிக்கையை அறிவிக்காமல் சந்தா பெற்றுத் தருவதாக உறுதி அளித்தனர்.
கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சுமார் 150 சந்தாக்களை வழங்குவது என்றும்,விரைவில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு என்று பெரியார் மய்யம், கழக அலுவலகம் அமைப்பது என்றும், வரும் ஆண்டுகளில் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளை ஊக்கம் படுத்தும் விதமாக சிறப்பு செய்வது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நிறைவாக திருப்பத்தூர் நகர தலைவர் காளிதாஸ் நன்றி தெரிவித்தார்.