தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது?

viduthalai
1 Min Read

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை புல்டோசரால் இடித்து விடுவார்கள்
பிரதமர் மோடியின் தரம் தாழ்ந்த பேச்சு பாரபங்கி, மே 18 உத் தரப்பிரதேச மாநிலம் பாரபங்கியில் நடை பெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண் டார். அப்போது அவர் பேசியதாவது;

“காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந் தால் அயோத்தியில் ராமர் கோயிலை புல் டோசர் வைத்து இடிப் பார்கள். குழந்தை ராமர், கோயிலில் இருந்து மீண்டும் கூடாரத்திற்கே செல்வார்.

புல்டோசர்களை எங்கு பயன்படுத்துவது, எங்கு பயன்படுத்தக் கூடாது என்பதை முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத்திடம் இருந்து அவர்கள் பயிற்சி எடுக்க வேண்டும். பா.ஜ.க. தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நாட்டின் முன்னேற்றத் திற்காக பாடுபடுகிறது. மறுபுறம், இந்தியா கூட்டணி குழப்பங்களை உருவாக்கி வருகிறது.

தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. அரசு ஹாட்ரிக் சாதனை படைக்கும். தேர்தல் நடந்து கொண்டிருக்கும் வேளை யில் இந்தியா கூட்டணி கட்சிகள் சீட் டுக்கட்டு போல சரியத் தொடங்கி உள்ளன.” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *