அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்துக் கூறுவதா?

Viduthalai
4 Min Read

ஆர்.எஸ்.எஸ்., பாஜக பரிவாரத்தின் விஷமப் பிரச்சாரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

அரசியல்

சென்னை,செப்.5- இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி தமிழ் நாடு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக் கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற ஸனாதன ஒழிப்பு மாநாட்டில் பங் கேற்று மாநில அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கும் போது பேசிய கருத்துக்களை திரித்தும் சிதைத்தும் ஆர்எஸ்எஸ், பாஜக பரிவாரம் விஷமப் பிரச்சாரம் செய்து வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக் கிறது.

ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் துவங்கி பாஜகவின் நட்டா, அண்ணாமலை வரை ஒரே குரலில் பொய்யுரைக்கின்றனர். பொய் புகார்களையும் ஹிந்துத்துவா அமைப்பினர் பல்வேறு மாநிலங் களில் கொடுத்து வருகின்றனர்.

இந்த மாநாடு இந்து மதத்திற்கு எதிராக நடத்தப்படவில்லை. மாறாக, ஸனாதனம், மநு நீதி, வர்ணாசிரமம் என்ற பெயரில் காலம் காலமாக திணிக்கப்படும் ஜாதிய மேலாதிக்கம், பெண்ண டிமைத் தனம், மூடநம்பிக்கை போன்றவற்றை எதிர்த்தே நடத் தப்பட்டது. இந்த மாநாட்டில் பகுத்தறிவாளர்கள் மட்டுமல்ல ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்ட வர்களும் பங்கேற்று உரையாற்றி யுள்ளனர். ஸனாதனக் கருத்தியல் எவ்வாறு இறை நம்பிக்கை கொண்ட மக்களையும் பிரித்து வைத்து மேலாதிக்கம் செய்கிறது என்று அவர்கள் தெளிவுபடுத்தி யுள்ளனர். கருநாடக மாநிலம், தேவதாசி முறை ஒழிப்பு சங்கத்தைச் சேர்ந்த தலைவரும் இந்த மாநாட் டில் பங்கேற்று மதத்தின் பெயரால் பெண்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகளை எடுத்துரைத் துள்ளார்.

ஸனாதன கருத்தியலுக்கு எதி ரான கருத்தியல் போர் என்பது கவுதம புத்தர் துவங்கி, சித்தர்கள், ராமானுஜர், வள்ளலார், நாராயண குரு, வைகுண்டசாமிகள், அய்யன் காளி, பசவண்ணா, ஜோதிபா பூலே என காலம் காலமாக நடந்தே வந்துள்ளது.

நம்முடைய அரசியல் சாசனம் இந்திய மக்கள் அனைவரும் சமமானவர்கள் என்றும் பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை என்றும் உறுதியாக பிரகடனம் செய்கிறது. இந்திய அரசியல் சாசனத்தின் பெயரால் பதவியேற்றுக் கொண்டுள்ள அமித்ஷா, நிர்மலா சீதா ராமன் போன்றவர்கள் சமத்துவத்துக்கு எதிரான கருத்தியலுக்கு ஆதரவளிப்பது அரசியல் சட்டத் திற்கு முரணானது ஆகும்.

இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, மக்களை ஜாதி ரீதியாக பிரித்து தனித்தனியாக இருக்க வேண்டும் என்று சொன்னதுதான் ஸனாதனம் என்றும், மணிப்பூர் மாநிலத்தில் சொந்த மக்களை இரண்டு குழுக்களாக பிரித்து கலவரத்தை மூட்டி விட்டுள்ளனர் இதுதான் ஸனா தனம் என்றும் விஸ்வகர்மா திட் டத்தை ஒன்றிய அரசு கொண்டு வருவதில் ஒரு சதி உள்ளது. குலக்கல்வி திட்டத்தை மீண்டும் கொண்டுவரும் முயற்சி இது என்றும் பேசியுள்ளார்.

பாசிஸ்ட்டுகள் நம்முடைய குழந்தைகளை படிக்கவிடாமல் செய்ய என்ன வழி என்று யோசித்து அதற்காகத்தான் இந்தத் திட் டத்தை கொண்டு வருகின்றனர் என்றும் நாம் படித்துவிடக்கூடாது என்பதுதான் ஸனாதனக் கொள்கை என்றும் பேசியுள்ளார்.

ஆனால், கிறிஸ்தவ, இஸ்லாமிய, சிறுபான்மையினரையும், தாழ்த்தப் பட்ட, பழங்குடி மக்களையும் மதத்தின் பெயராலும் ஜாதியின் பெயராலும் இனப்படுகொலை செய்யும் ஒரு கூட்டம் இந்துக்களை இனப்படுகொலை செய்ய அமைச் சர் தூண்டிவிடுவதாக பொய்யைப் பரப்புகின்றனர்.

மனு தர்ம ஆட்சியை மீண்டும் கொண்டுவரத் துடிக்கும் சங்பரி வாரத்தினர் மக்களை பிளவுபடுத்தி தங்களது வாக்கு வங்கி அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர் என்பதற்கு ஏராளமான சாட்சியங்கள் உள்ளன.

நரேந்திர மோடி தலைமையிலான கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்குலைவு நட வடிக்கைகளால் இந்துக்கள் உட் பட அனைத்து இந்திய மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட் ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வாலும், பணமதிப் பிழப்பு, ஜிஎஸ்டி வரி போன்ற நடவடிக்கைகளாலும் அனைத்து பகுதி  மக்களையும் தண்டித்துள்ளது ஒன்றிய அரசு.

நிலவுடைமையைப் பாதுகாக் கவும், மன்னராட்சி முறையை நியா யப்படுத்தவும் உருவாக்கப்பட்ட சனாதனம் உள்ளிட்ட பிற்போக்கு தத்துவங்களை இன்றைக்கும் பயன் படுத்தி கார்ப்பரேட் முதலாளி களின் கொள்ளைக்கும், சுரண்ட லுக்கும் துணை நிற்கிறது ஆர் எஸ்எஸ் – பாஜக பரிவாரம்.

ஊழல், விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற பிரச் சினைகளில் சிக்கித் திணறி தோல்வி பயத்தில் உள்ள பாஜக இந்திய மக்களை திசைதிருப்புவ தற்காக தன்னுடைய வழக்கமான பொய்ப் பிரச்சாரத்தை மீண்டும் துவக்கி யுள்ளது. தாம் எந்தவொரு மதத்திற்கும் எதிராகவும் பேச வில்லை. நான் அனைத்து மக்களுக் கும் பொதுவானவர் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவுபடுத்திய பிறகும் மாநாட் டில் பேசாத ஒன்றை திரித்து பாஜகவினர் மேற்கொள்ளும் பொய்ப் பிரச்சாரம் தோல்வி யடையும் என்பது உறுதி.

பாஜகவுக்கு எதிராக உருவாக் கப்பட்டுள்ள இந்தியா கூட்டணி யின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத ஆத்திரத்தில் சங்பரிவாரத்தினர் மேற்கொள்ளும் விஷமப் பிரச்சாரத்தை இந்திய மக்கள் நிராகரிப்பார்கள். மதச் சார்பற்ற அரசியலை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் பாஜகவினரின் அழிவு சித்தாந்தத்தை முறி யடிப்போம்.

-இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *