தொடர்ந்து உயரும் கடல் மட்டம் தாய்லாந்தின் தலைநகரை இடம் மாற்ற முடிவு

2 Min Read

பாங்காக், மே 18- கடல் மட்டம் உயர் வதால் நெதர்லாந்தில் பயன்படுத் தப்படுவதைப் போல, தடுப்புகளை அமைப்பது உள்ளிட்ட நடவடிக் கைகளை பாங்காக் நகர நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது.

தாய்லாந்தின் தலைநகர் பாங் காக், கடற்கரையை ஒட்டி தாழ் வான பகுதியில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கினால் அதிகம் பாதிக்கப் படுகிறது. நகரின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கிவிடுகிறது.

இது ஒருபுறமிருக்க, காலநிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் அதிகரிப்பதால் தலைநகருக்கு கூடு தல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பாங்காக் நகரின் தாழ்வான பகுதி கள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் கணித் துள்ளனர்.

எனவே, நாட்டின் தலைநகரான பாங்காக்கை இடமாற்றம் செய் வது தொடர்பாக அரசு பரிசீலனை செய்யலாம் என நாட்டின் கால நிலை மாற்ற அலுவலக மூத்த அதி காரி பவிச் கேசவவோங் கூறியிருக் கிறார். அவர் மேலும் கூறியதாவது:-

பாங்காக் நகரம் அதன் தற் போதைய வெப்பமயமாதல் பாதை யில், உலகத்துடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போகலாம். உலகளா விய வெப்பநிலை, தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருக்கிறது. ஏற்கெனவே (பாங்காக்) அந்த வெப்பநிலையை தாண்டி விட்டது.

இப்போது நாம் திரும்பி வந்து காலநிலை மாற்றத்தின் தாக்கங் களில் இருந்து பாதுகாக்கும் வழி முறைகள் குறித்து சிந்திக்க வேண் டும். இப்போது உள்ள சூழ்நிலை யில் நாம் இருந்தால், பாங்காக் தண்ணீருக்கு அடியில் இருக்கும்.

கடல் நீர் நகருக்குள் வருவதை தடுக்க, நெதர்லாந்தில் பயன்படுத் தப்படுவதைப் போல, தடுப்புகளை அமைப்பது உள்ளிட்ட நடவடிக் கைகளை பாங்காக் நகர நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது. ஆனால் நாங்கள் வேறு இடத்திற்கு நகர் வதை பற்றி யோசித்து வருகிறோம். இதுதொடர்பான விவாதங்கள் யூகத்தின் அடிப்படையில் நடை பெறுகின்றன. பிரச்சினை மிகவும் சிக்கலானது.

தலைநகரத்தை மாற்றுவது நல்ல தேர்வு என்பது எனது தனிப்பட்ட கருத்து. தலைநகரத்தை அரசாங்க நிர்வாகப் பகுதிகள் மற்றும் வணிக பகுதிகள் என பிரிக்கலாம். பாங்காக் அரசாங்க தலைநகராக இருக்கும். வணிகத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்.
-இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *