கறம்பக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டம்

Viduthalai
2 Min Read

கறம்பக்குடி, மே 18 புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தமிழ் நாடு அறிவியல் இயக்க புதுக் கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டம் ரீனா மெர்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட துணைத் தலைவர் முனைவர் பிச்சைமுத்து தலைமையில் நடந்தது. இதில் மாவட்டச் செயலாளர் வீர முத்து – வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் விமலா வரவு – செலவு அறிக்கையையும் அளித் துப் பேசினர்.
இதில் மாநில பொதுக்குழு உறுப் பினர் மணவாளன் அடுத்த மூன்று மாதங்களில் அறிவியல் இயக்கம் மக்களோடு இணைந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், மாநில செயற்குழு உறுப்பினர் முனைவர் ராஜ்குமார் வானியல் உற்றுநோக்கும் அறிவியல் பிரச்சார பயணத்தின் மூலம் கிராமங்கள் தோறும் அறிவியல் பார்வையை கொண்டு செல்வது குறித்தும், மாநிலச் செயலாளர் ஸ்டீபன்நாதன் காலநிலை மாற்றங்களால் மக்கள் சந்திக்கும் சிக்கல்கள் குறித்தும் பேசினர். இதில் மாவட்ட குழந்தை கள் நலக்குழு தலைவர் சதாசிவம் கோவிட் பாதிப்பிற்கு பிறகு மாண வர்கள் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நாம் கையாள வேண் டிய முறைகள் குறித்தும் பேசினர்.

இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் புதுக்கோட்டையின் அனைத்து ஊராட்சிகளிலும் குழந்தைகளுக் கான கோடைகால வாசிப்பு இயக்கம் நடத்துவது எனவும், புதுக்கோட்டை புத்தக திருவிழாவின் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இடங்களில் இரவு வான் நோக்குதல் நிகழ்வு நடத்துவது எனவும், அறிவியல் மனப்பான் மையை வளர்க்கும் விதத்தில் அறி வியல் அற்புதங்கள் மற்றும் ‘மந் திரமா தந்திரமா?’ நிகழ்வுகளை நடத் துவது எனவும், கோடைக்காலத்தில் மட்டுமல்லாமல், பிற நேரங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு இன்றியும், பாது காப்பான வகையிலும் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என வும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.

இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகி கள் ராமதிலகம், ஷோபா, பவனம் மாள், சாமியப்பன், செல்வராஜ், வடிவேல், ஜரினா பேகம், சண்முகப் பிரியா, ஒன்றிய நிர்வாகிகள் சாலை வேலம்மாள், சர்பிரசாதம், அறி வொளி கருப் பையா, ரஹ்மத்துல்லா, கமலம், முத்து, காளீஸ்வரி, ரஞ்சனி, இளவரசி, அனாமிகா, திவ்யா, ஜெனிட்டா, மலர் விழி, அருள் சுந் தரம், திவ்யா, பிரகதம்பாள், உள் ளிட்டோர் கலந்துகொண்டனர். முன் னதாக கறம்பக்குடி வட்டார செய லாளர் வீரபாலன் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவானந்தம் நன்றி கூறி னார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *