அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ரோபோடிக்ஸ் பயிற்சி முகாம் சென்னை விஅய்டி சார்பில் அய்ந்து நாள்கள் நடைபெற்றது

1 Min Read

சென்னை, மே 18 விஅய்டி கல்லூரி சார்பில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரோபோடிக்ஸ் இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது. கோடைக்கால விடுமுறையில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில், வி.அய்.டி சென் னையின் கணினி அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் துறை, சிவில் பொறி யியல் மற்றும் அட்வான்ஸ் சயின்ஸ் துறை ஆகியவை இணைந்து ரோபோடிக்ஸ் பயிற்சி அளிக்கும் இலவச முகாமினை நடத்தியது. கடந்த 13 ஆம் தேதி தொடங்கி நேற்று (17.5.2024) வரை நடந்தது.

இம்முகாமில் ரத்தினமங்கலம், மேலக்கோட்டையூர் அரசு உயர் நிலை பள்ளிகள், மாம்பாக்கம், கண்டிகை, ஓட்டேரி அரசு மேல் நிலைப்பள்ளி, கீரப்பாக்கம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் 5ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் 50 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளுக்கு ரோபோக் கள் மற்றும் டிரோன்கள் தயாரிப்பது மற்றும் இயக்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், ரோபோக்கள் மற்றும் டிரோன்களைப் பயன்படுத்துவது குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு உணவு, போக்கு வரத்து உள்ளிட்ட அனைத்து வசதி களும் வி.அய்.டி சென்னையின் நிதி உதவியின் கீழ் வழங்கப்பட்டது.

இப்பயிற்சியின் நிறைவு விழாவில் விஅய்டி துணைத் தலைவர் முனை வர் சேகர் விசுவநாதன் பங்கேற்று சிறப்பாக பயிற்சியில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
விழாவில், கணினி அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் துறையின் டீன் இரா.கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர். 5 நாள்கள் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் விஅய்டி சென்னையின் பேராசிரி யர்கள் முனைவர்.த.சத்தியன், முனைவர் வ.அருண்குமார், முனை வர் வெ.வாசுகி, முனைவர் வி.வித்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *