தள்ளுபடி செய்யப்பட்ட பிணை மனுக்களை நீதிமன்ற விடுமுறை கால அமர்வில் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்! உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சங்கம் முறையீடு

1 Min Read

சென்னை, மே 18- ஏற்கெனவே தள்ளுபடியான பிணை மற்றும் முன்பிணை மனுக்களை விடுமுறை கால அமர்வில் மீண்டும் தாக்கல் செய்ய அனுமதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற வழக் குரைஞர்கள் சங்கம் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கடந்த மே 1 முதல் ஜூன் 2 வரை கோடை விடுமுறை விடப்பட் டுள்ளது.
இந்த நாட்களில் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க சிறப்பு அமர்வுகள் ஏற்படுத்தப் பட்டு, முக்கியமான மற்றும் அவசரமான வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

பொதுவாக பிணை மற்றும் முன்பிணை கோரும் மனுக்கள் அவசர வழக்காக கருதப்படு வதில்லை.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங் கத்தில் நடைபெற்ற அவசர செயற்குழுக் கூட்டத்தில் விடு முறை கால அமர்வில் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்ட பிணை மற்றும் முன்பிணை மனுக்களை மீண்டும் தாக்கல் செய்ய அனு மதிக்கும்படி உயர் நீதிமன்ற பதிவுத் துறையை வலியுறுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் (எம்எச்ஏஏ) தலை வரான ஜி. மோகனகிருஷ்ணன் விடுமுறை கால சிறப்பு அமர்வில் நீதிபதி ஆர். சக்திவேல் முன்பாக ஆஜராகி ஒரு முறையீடு செய்தார்.

அதில், ‘‘பிணை கிடைக்காமல் பலர் மாதக் கணக்கில் சிறையில் இருந்து வருவதால் ஏற்கெனவே தள்ளுபடியான பிணை மற்றும் முன்பிணை மனுக்களை விடுமுறை கால சிறப்பு அமர்வில் மீண்டும் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண் டும்’ என கோரிக்கை விடுத்துள் ளார்.
அதேபோல முன்பிணை மனுக் களையும் அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரி யுள்ளார்.
இதுகுறித்து பரிசீலித்து முடி வெடுக்கப்படும்” என நீதிபதி தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *