தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இறுதியில் 27 மாவட்ட உள்ளாட்சிகளின் பதவிக் காலம் முடிவு தேர்தல் குறித்து முதலமைச்சர் ஆலோசனை

2 Min Read

சென்னை, மே 18- தமிழ்நாட்டில் இந்தாண்டு இறுதியில் 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புக ளின் பதவிக்காலம் நிறைவடைவ தால், தேர்தல் தொடர்பாக திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியா கியுள்ளது.
ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கு கடந்த 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் உள்ளாட் சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

அதிமுக ஆட்சியின்போது 2019ஆம் ஆண்டில் சில மாவட் டங்கள் பிரிக்கப்பட்டு அவற்றை யும் சேர்த்து 9 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதனால், 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது.

அதன்பின், 9 புதிய மாவட் டங்களில் வார்டு மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று, 2021இ-ல் திமுக ஆட்சி அமைந்ததும் அந்தாண்டு செப்டம்பர், அக்டோ பர் மாதங்களில் 2 கட்டங்களாக தேர்தல்கள் நடைபெற்றன.
இந்நிலையில், 2019 டிசம்பரில் தேர்தல் நடைபெற்ற ஊரக உள் ளாட்சி அமைப்புகளின் நிர்வாகி களுக்கான பதவிக்காலம் இந் தாண்டு டிசம்பர் மாதம் நிறை வடைகிறது.

உள்ளாட்சிகளின் பதவிக் காலம் முடிந்ததும், அவற்றை தரம் உயர்த்துதல், இணைத்தல் போன்ற பணிகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் 100 நாள் வேலை திட்டத்தை கருத்தில் கொண்டு, பல ஊராட் சிகளில் தரம் உயர்த்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இவற்றையும் பரிசீலித்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவற்கான ஏற் பாடுகள் மாநில தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப் படும் என தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, வரும் 2026ஆ-ம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அடுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைகிறது.

அப்போது அந்த அமைப்பு களுக்கான தேர்தலை நடத்த வேண்டியுள்ளது. இந்நிலையில், நேற்று (17.5.2024) திமுக தலைமை அலுவகம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலா ளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கட்சிநிர்வாக ரீதி யாக மாவட்டங்களை பிரிப்பது, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவது, தேர்தலுக்கு தயாராகுவது ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப் படுகிறது.

வரும் ஜூன் 4-ஆம் தேதி மக் களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நகர்வுகளை திமுக மேற்கொள்ளும் என தெரிகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *