அய்தராபாத்தில் காங்கிரஸ் செயற்குழு பிரமாண்ட பொதுக்கூட்டம்

1 Min Read

அய்தராபாத், செப்.6  அய்தராபாத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள் ளார். அய்தராபாத்தில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

 “அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் அய்தராபாத்தில் வரும் 16ஆ-ம் தேதி தொடங்குகிறது. மறுநாள் அதாவது செப். 17ஆ-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் அனைத்து மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள், உயர்மட்ட குழு நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். அன்று மாலை மாபெரும் பேரணியும் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட உள்ளது” என்றார். 

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே அக்கட்சியின் செயற் குழுவில் புதிய உறுப்பினர்களை கடந்த மாதம் 20ஆ-ம் தேதி நியமனம் செய்தார். இதில், சசி தரூர், ஆனந்த் சர்மா உள்ளிட்ட 84 உறுப்பினர்களுக்கு முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *