‘விடுதலை’ சந்தா சேர்ப்புப் பணி தஞ்சையில் தீவிரம்!

1 Min Read

தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி நீலமேகம் அவர்களுடன்
கழகப் பொறுப்பாளர்கள் சந்திப்பு

தஞ்சாவூர், மே17- தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினருமான டி.கே.ஜி நீலமேகம் அவர்களை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், தஞ்சை மாநகர இணைச் செயலாளர் இரா. வீரக்குமார் ஆகியோர் சந்தித்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனை 17ஆவது பாகம் நூலினை அளித்தனர். 91 வயதிலும் 19 வயது இளைஞரை போல் செயலாற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உழைப்பிற்கு பெருமை சேர்க்கும் வகையில் உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலை சந்தாக்களை பெரும் அளவில் திரட்டிட ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தார் நன்றி கூறி விடைபெற்றனர் கழகப் பொறுப்பாளர்கள் . உடன் தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஆர்.கே நீலகண்டன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *