‘இந்தியா’ என்ற பெயரை உச்சரிப்பதற்கோ எழுதுவதற்கோ ஒன்றிய அரசு அஞ்சுகிறது இரா.முத்தரசன் பாஜகமீது சாடல்

1 Min Read

அரசியல்

சென்னை,செப்.6 – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு: ஜி 20 மாநாட்டை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட் டுள்ள விருந்துக்கான அழைப்பை இந்திய குடியரசு தலைவர் அனுப்பி இருக்கிறார். ஆங்கிலத்தில் அமைந்த அந்த அழைப்பிதழில், ‘பாரத குடியரசு தலைவர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இந்தியா’ என்ற நம் தாய் நாட்டின்  பெயரை உச்சரிப்பதற்கோ எழுதுவதற்கோ ஒன்றிய அரசு அஞ்சுகிறது. ஹிந்தி மொழியில் எழுதப்படும் பெயர்களை மொழிபெயர்க்கும் போது, அந்தந்த மொழிச் சொற்களில் மொழி மாற்றம் செய்வதற்கு பதிலாக, ஹிந்திச் சொற்களை அப்படியே எழுத வேண்டும் என்று ஒன்றிய அரசு நிர்ப்பந்திக்கிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் மட்டுமல்லாது சட்டங்களின் பெயர்களையும் கூட ஹிந்தியிலேயே எழுதும் முறை திணிக்கப்படுகிறது. ஹிந்தி மொழி அறியாத இந்திய மக்களை, அந்நியப்படுத்தும் ஒன்றிய அரசின் பொருத்தமற்ற அணுகுமுறையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு இராமுத்தரசன் குறிப் பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *