நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மாநில அளவில் பாராட்டு விழா பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

viduthalai
2 Min Read

சென்னை, மே 17 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 6 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 10 ஆம் தேதியும் வெளியிடப்பட்டது. இதில் 1761 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அழைத்து சென் னையில் பாராட்டு விழா நடத்தப் படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது; 2023_2024 ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர் அலுவ லர்களுக்கான சீர்மிகு பாராட்டு விழா சென்னையில் நடைபெறு கிறது. அரசுப்பள்ளிகள் வறுமையின் அடையாளம்’ அல்ல; அவை பெருமையின் அடையாளம் என தொடர்ந்து பறைசாற்றும் வகையில் நடப்புக் கல்வியாண்டின் பொதுத் தேர்வு முடிவுகள் எடுத் துக்காட்டுகின்றன.மேல் நிலைத் தேர்வில் (12 ஆம் வகுப்பு), 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப்பள்ளிகளில் மட்டும் 91.02 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். குறிப் பாக 397 அரசு மேல்நிலைப் பள்ளிகள், இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காட்டை எட்டி சாதனைப் படைத்துள்ளன. மேலும், தமிழ்ப் பாடத்தில் 35 மாணவர்கள் 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

உயர்நிலைப் பள்ளி பொதுத் தேர்வில் (10 ஆம் வகுப்பு) 91.55 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 87.90 ஆகும். 1364 அரசுப் பள்ளிகள் இந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன. தமிழ் பாடத்தில் மட்டும் 100 சதவீத மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண் ணிக்கை 8 ஆகும்.

ஆக மொத்தம் 12 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் 1761 பள்ளிகள் இவ்வாண்டு 100 சதவீத தேர்ச் சியைப் பெற்றுள்ளன. இது ஒரு வரலாற்று சாதனையாகும். பள்ளிக் கல்வித் துறை வாலாற்றில் மேலும் ஒரு மைல்கல் ஆகும். எனவே இப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டும் வண்ணம் சென்னையில் ஒரு சீர்மிகு விழா நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. அவ்விழாவில் தமிழ்ப்பாடத்தில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்ற பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளைச் சேர்ந்த 43 மாணவர்களும் கவுர விக்கப்படுவார்கள்.

இப்பாராட்டு விழாவின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற தலைமை ஆசிரியர்கள் அழைக்கப் பட்டு அவர்களுக்கு உரிய அறிவு ரைகள் வழங்கப்படும். மேலும், 100 சதவீதம் எட்டிய தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் செய்து கருத்துகள் பரிமாற்றம் ஏற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் மேலும் அவர்களுக்கு ஒரு உத்வே கத்தை ஏற்படுத்தும்.ஒவ்வோர் ஆண்டும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தேர்ச்சி 100 சதவீத இலக்கை எட்டவும் வழிவகை செய்யும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப் படுகிறது. இவ்வாறு பள்ளிக் கல் வித்துறை அறிவிப்பில் குறிப் பிடப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *