போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை தீவிர நடவடிக்கை எடுக்க ஆணை

2 Min Read

சென்னை, மே 17 போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்து, போதை ஒழிப்பு நடவ டிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிகாரி களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

போதைப்பொருட்கள், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை மற் றும் பரிமாற்றத்தைத் தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக் கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. இந்த சூழ் நிலையில், கடந்த சில நாட் களுக்கு முன் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

ஆலோசனைக் கூட்டம்

இதையடுத்து, நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ் நாடு முழுவதும் போதைப் பொருள் நட மாட்டம் தொடர்பாகவும் மாவட்ட வாரியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, முதலமைச்சரின் செயலர் நா.முருகானந்தம், உள்துறை செயலர் அமுதா, சுகாதாரத் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி உள்பட பல துறைகளின் செயலர்கள், தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் அருண், சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உள்ளிட்ட காவல்துறை அதி காரிகள் பங்கேற்றனர்.
அப்போது துறைவாரியாக செயல்திட்டங்களை ஒருங் கிணைத்து போதைப்பொருள் நடமாட்டம், பயன்பாட்டுக்கு எதிரானநடவடிக்கைகளைத் தீவிரப்படுத் தும்படி அதிகாரி களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

உயர் நீதிமன்றம் பாராட்டு

தமிழ்நாட்டில் போதை பொருள் தடுப்பு தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக் கைகளை சென்னை உயர்நீதி மன்றம் பாராட்டிய நிலையில், தமிழ்நாடு அரசின் நடவடிக்கை மேலும் வேகமெடுத்துள்ளது. இதையடுத்தே, நேற்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோ சனை நடத்தினார். இக்கூட் டத்தில், நீதிமன்றத்தின் பாராட்டு குறித்துதெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளை பாராட்டினார். அத்துடன், போதைப் பொருள் தடுப்பு அலுவலர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கவும் இக் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தி யுள்ளார்.மேலும், வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில், போதைப் பொருள் தடுப்புப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது, புதிய திட்டங் களை அறிவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *