புதுக்கோட்டையில் திறக்கப்பட்ட பெரியார் மணியம்மை பல்கலைக் கழக மாணவர் சேர்க்கைக்கான அலுவலகம்

0 Min Read

புதுக்கோட்டை மேல நான்காம் வீதியில் எண் 3568, இலக்கத்தைக் கொண்ட கட்டடத்தில், தஞ்சை வல்லத்தில் இயங்கி வரும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவரின் சேர்க்கை அலுவலகம் திறக்கப்பட்டது. புதுக்கோட்டை கழகத் தலைவர் மு.அறிவொளி, மாவட்ட செயலாளர் ப.வீரப்பன், பொதுக்குழு உறுப்பினர் செ.இராசேந்திரன், நகரத் தலைவர் ரெ.மு.தருமராசு, கணிதத்துறை உதவிப் பேராசிரியர் செ.திலீப் ஜோஸ், இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் தா.பாக்கியராஜ், புதுகை மலபார் மரக்கடை உரிமையாளர் அப்துல்லா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கெண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *