கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

16.5.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
டில்லியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரம்; இந்தியா கூட்டணியினர் மகிழ்ச்சி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு – பா.ஜ.க.வுக்கு எதிராக செயல்படும்: சரத் பவார்.
மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக உச்ச நீதிமன்றத்தால் இடைக்காலப் பிணை பெற்ற முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று லக்னோவில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தில் வாக்காளர்கள் மத்தியில், மாற்றத்திற்கான ஆசை முணுமுணுக்கிறது – அயோத்தியில் ராமன் கோயில் பற்றி பேசுபவர்கள் குறைவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
அரசியல் சட்டத்தை அழிக்கவும், இட ஒதுக்கீட்டை ரத்து செய்யவும் பாஜக விரும்புகிறது – ராகுல் காந்தி.
தி இந்து
பஞ்சாப், அரியானா, இமாச்சல் பிரதேசத்தில் இளம் வாக்காளர்கள் மத்தியில் அக்னிபாத்துக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் தீவிர பிரச்சாரம்.
தி டெலிகிராப்
பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் வாழ்க்கை, உத்தரவாதம் எப்படி பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்பது குறித்து அமேதி விவசாயி தனது எண்ணங்களை பகிர்ந்துள்ளார்.
மாணவர்களின் தற்கொலை, முறைகேடுகளை தடுக்க நீட் தேர்வை ரத்து செய்வதே ஒரே தீர்வு, தி.மு.கவின் பத்திரிகை தலையங்க செய்தி.
நலத்திட்டங்கள் ஏழ்மையானவர்களைத் தவிர்க் கின்றன: வீட்டுவசதி முதல் ஓய்வூதியம் வரை, தாழ்த்தப் பட்டோர் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றனர் என்கின்றனர் உ.பி.யில் பாதிக்கப்பட்ட மக்கள்.
டைம்ஸ் ஆப் இந்தியா
வாக்குகளுக்காக மத அடிப்படையில் பிளவை ஏற்படுத்திய முதல் பிரதமர் மோடி – சரத்பவார் குற்றச்சாட்டு.
மோடி இனி பிரதமராக மாட்டார் – பாஜக பிளவுபடும் என உத்தவ் தாக்கரே கணிப்பு.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *