கடவுள் சக்தி எங்கே? 4 கோயில்களில் உண்டியல்கள் உடைத்து பணம் கொள்ளை

1 Min Read

புவனகிரி, மே 16- புவன கிரி அருகில் உள்ள பூ மனவெளி கிராமத்தில் அய்யனார் கோயில் உள் ளது இந்தக் கோயிலுக்கு அருகே உள்ள பூதவி ராயன்பேட்டை கிராமத்தில் அக்னி மாரியம்மன் கோயில் உள்ளது நேற்று (15.5.2024) காலை இந்த கோயிலுக்கு வந்த பக் தர்கள் கோயிலின் உண் டியல் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதை அடுத்து மூன்று கோயில்களில் இருந்த உண்டியல்கள் உடைக் கப்பட்டு பணம் திருடப் பட்டு இருந்தது. அத னால் அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் நிகழ்வு குறித்து தகவல் அளித்தனர்.புவனகிரி காவல்துறையினர் நிகழ்வு இடத்திற்கு சென்று விசாரணை நடத் தினர்

இதற்கிடையே புவனகிரி அருகே உள்ள சொக்கன்கொல்லை கிராமத்தில் உள்ள வள்ளலார் கோயிலிலும் உண்டியல் உடைக்கப் பட்டு இருப்பது தெரிய வந்தது. புகாரின் பேரில் அங்கு சென்ற புவனகிரி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

ஒட்டுமொத்தமாக 4 கோயில்களிலும் உண்டி யல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருக்க லாம் என காவல்துறையினர் முதற்கட்ட விசா ரணையை தெரியவந்தது புவனகிரி பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்த நான்கு கோயில்களின் உண்டியல் உடைக்கப்பட்டு திருடப் பட்ட நிகழ்வு பெரும் பர பரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கோயிலில் உள்ள உண் டியலையே பாது காத்துக் கொள்ளாத சாமி எப்படி சாதாரண மனிதர்களை காப் பாற்றும் என்று பொது மக்கள் கேள்வி கேட்கின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *