ராமன் விரோதிகளைக் கண்டிக்கவே இந்தத் தேர்தல் என்று பிஜேபி தலைவர் ஜே.பி.நட்டா பேசியிருக்கிறார். ராமாயணம் என்பது ஆரியர் – திராவிடர் போராட்டம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அப்படி என்றால் ஆரியர் அல்லாதவர்களை எதிர்த்துத் தான் இந்தத் தேர்தல் என்று ஜே.பி.நட்டா சொல்ல வருகிறாரா? இன்னொன்று ராமன் கடவுளானால், அவனுக்கு விரோதிகள் எப்படி ஏற்பட முடியும்?