பெரியார் பெருந்தொண்டர் காரைக்கால் பெரியார் முரசுக்கு இறுதி மரியாதை

Viduthalai
1 Min Read

அரசியல்

காரைக்கால், செப். 7- முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் காரைக்கால் பெரியார் முரசு (எ) ஆறுமுகம் அவர்கள் 93ஆவது வயதில் முதுமையின் காரணமாக இயற்கை எய்தியதையொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ. வீரமணி தலைமையில் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தப் பட்டது. இதில் காரை மாவட்ட கழக காப்பாளர் ரா. ஜெயபாலன்,  காரைக் கால் மாவட்ட கழக தலைவர் குரு. கிருஷ்ணமூர்த்தி,  மாவட்ட செயலாளர் பொன். பன்னீர்செல்வம்,  பொதுக்குழு உறுப்பினர்கள் ந. அன்பானந்தம்.  க.பதி ஜெய்சங்கர். மாவட்டத் துணைத் தலைவர் ராஜரத்தினம். கோட்டுச்சேரி தொகுதி தலைவர் பொற்கோ. இளைஞர் அணி துணை செயலாளர் மு. க. ஸ்டாலின். ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *