இளங்கலை அறிவியல் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பிற்கு சென்னை அய்அய்டியில் விண்ணப்ப பதிவு தொடக்கம்

1 Min Read

சென்னை,மே15- சென்னை அய்அய்டியில் இளங்கலை அறிவியல் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பிற்கான விண் ணப்ப பதிவு தொடங்கி யுள்ளது.
இதுகுறித்து சென்னை அய்அய்டி வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:

இந்த 4 ஆண்டுகால படிப்பில் அடிப்படை நிலைச் சான்றிதழ், டிப் ளமோ, பிஎஸ் பட்டம் ஆகியவற்றை மாண வர்கள் பெற முடியும். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பானது, தொழில் துறைக்கு தேவையான திறன்களை வழங்குகிறது. இந்தியாவில் மின்னணு மற்றும் உட்பொதிக்கப் பட்ட தயாரிப்புகள் துறையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளை அதிக அளவில் உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்க மாகும்.
மின்னணு தயாரிப்பு மற்றும் வடிவமைப்புக் கான உலகளாவிய மய்ய மாக இந்தியாவை உரு வாக்க இந்தியா செமிக் கண்டக்டர் மிஷன் திட்டத்துடன் இணைந் துள்ளது.
இந்த படிப்பில் ஆர்வ முள்ள மாணவர்கள்

மே 26ஆம் தேதி வரை https://study.iitm.ac.in/es/என்ற இணைய தளம் மூலமாக விண்ணப் பிக்கலாம்.
இவ்வாறு அதில் குறிப் பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *