ஏட்டுத் திக்குகளிலிருந்து…

Viduthalai
1 Min Read

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
15.5.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தெலங்கானாவில் 17 இடங்களில், காங்கிரஸ் 13 இடங்களை கைப்பற்றும், ரேவந்த் உறுதி
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 100 ஸ்மார்ட் நகரங்கள் அமைப்பதாக பிரதமர் வாக்குறுதி அளித்து, எதுவும் செய்யவில்லை: ராகுல்
* தேர்தல் நேரத்தில் எருமை மாடுகள், மங்கள சூத்திரம், கோவில்கள் மற்றும் மசூதிகள் பற்றி கேட்க விரும்பவில்லை என்று மக்கள் குரல் எழுப்பி பிரதமர் மோடியிடம் கூற வேண்டும் என்று பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்களின் பிரச்சினை களுக்கான தீர்வுகள் குறித்துப் பேசுமாறு பிரதமரிடம் கூறுமாறு கேட்டுக் கொண்டார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 20 ஆயிரம் கோடி செலவழித்த பின்னரும் கங்கை அசுத்தமாக இருப்பது ஏன்? வாரணாசியில் தத்தெடுத்த கிராமங்களை பிரதமர் கைவிட்டது ஏன்? காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி.
தி டெலிகிராப்:
* மராத்தா இட ஒதுக்கீடு, சரத்பவார், உத்தவ் தாக்கரே ஆகியோர் மீதான மதிப்பு,மகாராட்டிராவில் பாஜக வெற்றி பெற தடையாக உள்ளது.
* பிரதமர் மோடியின் தொடர் பிரச்சாரம் மேற் கொண்டாலும், தெற்கில் சென்ற முறை பா.ஜ.க. பெற்ற 29 இடங்களை வெல்வது கடினமே.
– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *