ஏட்டுத் திக்குகளிலிருந்து…

1 Min Read

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
15.5.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தெலங்கானாவில் 17 இடங்களில், காங்கிரஸ் 13 இடங்களை கைப்பற்றும், ரேவந்த் உறுதி
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 100 ஸ்மார்ட் நகரங்கள் அமைப்பதாக பிரதமர் வாக்குறுதி அளித்து, எதுவும் செய்யவில்லை: ராகுல்
* தேர்தல் நேரத்தில் எருமை மாடுகள், மங்கள சூத்திரம், கோவில்கள் மற்றும் மசூதிகள் பற்றி கேட்க விரும்பவில்லை என்று மக்கள் குரல் எழுப்பி பிரதமர் மோடியிடம் கூற வேண்டும் என்று பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்களின் பிரச்சினை களுக்கான தீர்வுகள் குறித்துப் பேசுமாறு பிரதமரிடம் கூறுமாறு கேட்டுக் கொண்டார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 20 ஆயிரம் கோடி செலவழித்த பின்னரும் கங்கை அசுத்தமாக இருப்பது ஏன்? வாரணாசியில் தத்தெடுத்த கிராமங்களை பிரதமர் கைவிட்டது ஏன்? காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி.
தி டெலிகிராப்:
* மராத்தா இட ஒதுக்கீடு, சரத்பவார், உத்தவ் தாக்கரே ஆகியோர் மீதான மதிப்பு,மகாராட்டிராவில் பாஜக வெற்றி பெற தடையாக உள்ளது.
* பிரதமர் மோடியின் தொடர் பிரச்சாரம் மேற் கொண்டாலும், தெற்கில் சென்ற முறை பா.ஜ.க. பெற்ற 29 இடங்களை வெல்வது கடினமே.
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *