வணிகர்களின் தொழில் உரிமம் புதுப்பிக்க மே 31 வரை கால அவகாசம்

viduthalai
1 Min Read

சென்னை,மே 14- சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வணிகம் செய்து வருவோர் தங்களது தொழில் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று (13.5.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சென்னை மாநகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் தொழில்புரிவோர் 2024-2025ஆம் ஆண்டுக்கான தொழில் உரிமத்தை புதுப்பிக்கும் காலம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில், வணிகர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு தொழில் உரிமம் புதுப்பிக்கும் காலத்தை வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை வணிகர்கள் பயன்படுத்தி தொழில் உரிமத்தை புதுப்பித்துக் கொண்டு பயனடைய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *