பள்ளி நலத்திட்ட தகவல்களை பெற்றோருக்கு பகிர புதிய வலைதளம் பள்ளி கல்வித் துறையின் பாராட்டத்தக்க முயற்சி

2 Min Read

சென்னை, மே 14- தமிழ் நாடுஅரசின் அறிவிப்புகள், திட் டங்களை பெற்றோருக்கு பகிர்வ தற்காக வாட்ஸ்-அப் வழியாக ஒரு தளத்தை உருவாக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு வித மான நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இதற்கிடையே பள்ளிக் கல்வித் துறையின் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) எனும் இணையதளத்தில் அரசு, அரசு உதவி, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர் களின் முழு விவரங்கள் சேகரிக்கப் பட்டு, அதற்கேற்ப நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

மேலும், கல்வித் துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் களின் செயல்பாடுகளும் எமிஸ் தளம் வழியாக கண்காணிக்கப் படுகிறது.
இந்நிலையில் நலத் திட்டங்கள் சார்ந்த தகவல்களை பெற்றோருக்கு பகிர்வதற்காக வாட்ஸ்-அப் வழி யாக ஒரு தளத்தை உருவாக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் கிடைத் துள்ளன. இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறிய தாவது:

வாட்ஸ்-அப் செயலி வாயிலாக ‘டிபார்ட்மென்ட் ஆப் ஸ்கூல் எஜூகேஷன்’ (department of school education) எனும் புதிய தளம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இதற்காக மெட்டா நிறுவனத் துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த புதிய தளத்தில் ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கும் மேலாக தகவல் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது அந்த வாட்ஸ்-அப் தளம் பரிசோதனை முயற்சியில் இருக்கிறது.

இதற்கு ஏதுவாக எமிஸ் தளத்தில் உள்ள 1.16 கோடி மாணவர்களின் பெற்றோரது தொலைபேசி எண்களில் பயன் பாட்டில் உள்ளவை எத்தனை, அவை அனைத்தும் வாட்ஸ்-அப் உடன் இணைக்கப்பட்டு உள்ளதா என்ற சரிபார்ப்பு பணிகள் தற்போது நடைபெற்று வரு கின்றன.

இதுவரை 5 லட்சம் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மே 25ஆம் தேதிக்குள் இந்த பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயித்து இதர எண் களின் சரிபார்ப்பு துரிதப்படுத்தப் பட்டுள்ளது.

அவை நிறைவு பெற்றதும் இந்த தளம் பயன்பாட்டுக்கு வரும். இதன்மூலம் ஆசிரியர்கள், மாண வர்கள், பெற்றோருக்கு தேவை யான அனைத்து தகவல்களையும் உடனே கொண்டு சேர்க்க முடியும். மேலும், பள்ளி, வட்டம், மாவட் டம், மாநில, இயக்குநரகம் அள விலும் இந்த தளம் வழியாக தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள முடியும்.
மேலும், இது பெற்றோருக்கும், பள்ளிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை சரிசெய்யும் கரு வியாக இருக்கும். இவ்வாறு அவர் கள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *