நாகை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 150 விடுதலை சந்தாக்களை திரட்டி வழங்கிட முடிவு!

2 Min Read

நாகப்பட்டினம், மே 14- நாகை மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர் கள் கலந்துரையாடல் கூட்டம் நாகப்பட்டினம் பூம்புகார் விடுதி மேல் தளத்தில் மதியம் 12 மணிக்கு தொடங்கி எழுச்சியு டன் நடைபெற்றது.
நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நப்போலியன் தலைமையில் நடைபெற்ற கூட் டத்தில் மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ் குப்தா அனைவரை யும் வரவேற்று உரையாற்றினார்.
கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் தஞ்சை.இரா.ஜெயக்குமார் சிறப்புரையாற்றி னார்.
மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக .பொன்முடி கூட்டத்தின் தீர்மானங்களை வாசித்து உரையாற்றினார்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

இரங்கல் தீர்மானம், நாகை நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பி னருமான தோழர் எம்.செல்வ ராஜ், கீழையூர் மேனாள் ஒன்றிய கழகச் செயலாளர் முருகேசன் ஆகியோர் மறைவிற்கு நாகை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத்தையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு இன உரிமை மீட்பு ஏடான விடுதலைக்கு நாகை கழக மாவட்டம் சார்பில் 150 விடுதலைச் சந்தாக்களை திரட்டி வழங்குவது என முடிவு செய் யப்படுகிறது.
24.03.2024 அன்று தஞ்சை யில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக் குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

சுயமரியாதை இயக்க நூற் றாண்டு விழா- குடிஅரசு ஏடு நூற்றாண்டு விழா பிரச்சாரக் கூட்டங்களை மாவட்டம் முழு வதும் பரவலாக நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
கூட்டத்தில் தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட துணை செய லாளர் துரைசாமி, கீழையூர் ஒன்றிய தலைவர் ரெங்கநாதன், மாவட்டத் துணைத் தலைவர் பொன்.செல்வராஜ், திருமருகல் ஒன்றிய தலைவர் சின்னதுரை, மாவட்ட இளைஞரணி தலை வர் சு.ராஜ்மோகன், நாகை ஒன் றிய செயலாளர் சின்னதுரை, திருமருகல் ஒன்றிய துணை செயலாளராக ரமேஷ், ஒன்றிய விவசாய அணி செயலாளர் ஒக்கூர் ராஜேந்திரன், இளைஞர் அணி பொறுப்பாளர் தங்க கிருஷ்ணா ஆகியோர் பங்கேற் றனர். கூட்டத்தில் மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *