கோவிஷீல்ட் தடுப்பூசியால் பக்க விளைவுகள் இல்லை: அச்சப்பட வேண்டாம்

1 Min Read

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை, மே.14-கோவிஷீல்டு தடுப் பூசியால் பக்கவிளைவுகள் இல்லை என் றும், தேவையற்ற பதற்றம் கொள்ள வேண்டாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறினார். கோயம்பேட்டில் தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தலை அமைச் சர் மா.சுப்பிரமணியன் 12.5.2024 அன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அவ ரிடம், கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட வர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு வரு வதாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர் கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச் சர் மா.சுப்பிரமணியன் அளித்த பதில் வருமாறு:-
கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ் நாட்டில் பக்கவிளைவுகள் இல்லை. எந்த தடுப்பூசியாக இருந்தாலும் அவரவர் உட லில் உள்ளநோய் எதிர்ப்பு திறனை பொறுத்துதான் பின்விளைவுகள் இருக் கும். அதாவது ரத்தம் உறைதல் மாதிரி யான பாதிப்புகள் இருக்கும் என்று சொல் லியிருக்கிறார்கள். இது வரை பெரியளவில் பாதிப்புகள் வெளியே தெரியவில்லை.
கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ் நாட்டில் யாருக்கும் எவ்வித பக்க விளை வுகளும் ஏற்படவில்லை யாரும் பதற்றத் துடன் இருக்க வேண்டாம். நோய் எதிர்ப்பு சக்தி தங்கள் உடலில் குறையாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண் டும். காலையில் எழுந்து நடப்பது உள் ளிட்ட உடற்பயிற்சிகளை செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதி கரித்துக்கொள்ள வேண்டும். -இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *