“விஸ்வகர்மா யோஜனா” என்பது ஏதோ தொழிலை ஊக்குவிக்கும் திட்டம் என்று மேம்போக்காகப் பார்த்து நல்லதுதானே என்று நம்பி மோசம் போகக் கூடாது.
பரம்பரை ஜாதித் தொழில் செய்கின்றவர் (அதிலும் 18 தொழில்கள்)களுக்குத்தான் இந்தக் கடன் உதவியே தவிர, மற்ற தொழில்களைச் செய்பவர்களுக்கல்ல என் பதைத் திண்ணமாக முடிவு செய்து கொள்ள வேண்டும்.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி செங்கோட்டையில் மோடி பேசும் போது குலத்தொழில்களைச் செய்பவர்கள் அவர்களது குடும்பத் தொழிலை தொடர்ந்து செய்தால் நிதி கொடுப்போம் என்று அறிவித்து அதற்கு விஸ்வகர்மா திட்டம் என்று பெயரும் சூட்டினார்.
தச்சர், செருப்பு தைப்பவர், சலவைத் தொழிலாளி, சவரத் தொழிலாளி முதல் பரிசல் மற்றும் சிறு ஓடம் செய்பவர்கள் வரை இந்த திட்டத்தின் கீழ் வருகிறார்கள்.
இந்த நிலையில் அந்த திட்டத்தில் இணைபவர்கள் குறித்த குறிப்பு ஒன்றை ஒன்றிய அரசு வெளி யிட்டுள்ளது.
அதில் விண்ணப்பதாரர் தனது குடும்பம் பரம்பரை பரம்பரையாக அந்தத் தொழிலைத்தான் செய்திருக்க வேண்டும் என்பது உறுதிப்படுத்திக் கூறியுள்ளது.
எடுத்துக்கட்டாக அவர்கள் பரம்பரை பரம்பரையாக செருப்பு தைக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும். அதை உறுதி செய்ய பஞ்சாயத்து தலைவர், தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர்களிடம் எங்கள் குடும்பம் பரம்பரை பரம்பரையாக செருப்பு மட்டுமே தைத்து வருகிறது என்பதாக சாட்சிகளோடு மனுவை சமர்ப்பித்து, அதில் அதிகாரிகள் நன்கு ஆய்வு செய்து சான்றிதழ் தருவார்கள்; அந்தச் சான்றிதழ் தான் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் செல்லும்; இங்கு செருப்பு தைப்பவர் தச்சர் வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது, மரத்தச்சர் தங்க ஆசாரி வேலைக்கு நிதி கேட்டு விண்ணப்பிக்க முடியாது – என்று விஸ்வகர்மா திட்ட விதிகள் தெளிவாக குறிப்பிடுகிறது,
5.2.1 Stage 1: Verification at Gram Panchayat or ULB level
The first step of screening for the artisans and craftspeople registered under PM Vishwakarma will be through the head of Gram Panchayat/ Chairman of Village Council or Executive Head/ Administrator of the Urban Local Body. The Head of Panchayat can use services of Gram Sevak/Panchayat Secretary in screening and verifying the details provided by the beneficiaries. The Head of Gram Panchayat will also ascertain that the beneficiary has been traditionally engaged in the trade on self-employment basis. The verification shall include screening of family details mentioned by the beneficiary to ensure that only one eligible person is covered from a family. The same shall be applicable for the Executive Head in ULB. The details collected by VLES will be certified by the Head of Gram Panchayat in the villages or the Executive Head of ULBS.
இந்த விஷப் புள்ளியைப் பார்க்கையில் – திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் குறிப்பிடுவது போல இது ஒரு “மயக்க பிஸ்கட்” டாகும்.
1952-1954இல் ஆச்சாரியார் கொண்டு வந்த குலக் கல்வி திட்டத்தின் மறுவடிவம்தான் இந்த விஸ்வகர்ம யோஜனா – என்பதை அய்யமே இல்லாமல் தெரிந்து கொள்வீர்! புரிந்து கொள்வீர்!!