படிக்கட்டு பயணத்தை தடுக்க 900 அரசு பேருந்துகளில் தானியங்கி கதவுகள்

viduthalai
1 Min Read

சென்னை, மே 14– சென்னை மாநகர போக்குவரத்து கழகப் பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக் கட்டில் பயணிப்பதை தடுக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் 900க்கும் மேற் பட்ட பேருந்துகளில் தானியங்கி கதவு கள் நிறுவியுள்ளது.
இது தவிர கூடுதலாக, பேருந்துகளின் நுழைவு மற்றும் வெளியேறும் படிக் கட்டுகளுக்கு அருகே உள்ள ஜன்னல் கள் கண்ணாடி பேனல்கள் நிறுவப் பட்டுள்ளன. இதனால் பயணிகள் தொங்கியபடி செல்வதை தடுக்க முடி யும். கடந்த பிப்ரவரியில் தொடங்கப் பட்ட டீலக்ஸ் மற்றும் சாதாரண சர்வீஸ் பேருந்துகளின் மறுசீரமைப்புப் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன.
அதில் பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், பழைய மற்றும் பழுதடைந்த எக்ஸ்பிரஸ் பேருந்துகளுக்கு தானியங்கி கதவுகள் பொருத்தப்படவில்லை. தேய்ந்துபோன பேருந்துகளின் ஒரு பகுதி விரைவில் புதிதாக மாற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கதவுகள் பொருத் தப்பட்டதால் படிக்கட்டுகளுக்கு இடம் சிறிது சுருங்கியுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து தற்போது 3,100 பேருந்துகள் உள்ளன. அவை 629 வழித்தடங்களில் இயக் கப்படுகின்றன. இது நாள்தோறும் சுமார் 29.5 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்கிறது. சராசரியாக, ஒவ் வொரு பேருந்தும் நாள்தோறும் 265 முதல் 270 கி.மீ. தூரம் வரை பயணிக் கிறது-. இதுகுறித்து பேருந்து ஓட்டு நர்கள் கூறியதாவது: புதிதாக கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது எங்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.பொதுவாக, பொருட்கள் அல்லது பைகள் இல்லாமல் இருவர் ஒவ்வொரு கதவு வழியாகவும் ஒரே நேரத்தில் நுழைந்து வெளியேற முடியும்.
ஆனால், இப்போது ஒருவர் மட்டும் அதைப் பயன்படுத்த முடியும். படிக் கட்டில் யாராவது நின்றால் பேருந் துகளை இயக்கக் கூடாது என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *