அண்ணா குறித்து அவதூறு அண்ணாமலை மீது வழக்கு

viduthalai
1 Min Read

சென்னை, மே 13- தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது சேலம் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதில், அண்ணாமலை தமிழ்நாடு மக்களிடையே மோதல்களை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார் எனவும் தெரிவித்து இருந்தார்.
இரு சமூகத்திற்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான பிரிவு என்பதால் அரசின் அனுமதி பெற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில், சமூக ஆர்வலர் அளித்த புகாரின் பேரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசின் செயலாளர் நந்தகுமார் அனுமதி அளித்து உள்ளார். இதன் நகல் தற்போது சேலம் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. அனுமதி நகல் நீதிமன்றத்திற்கு அனுப்பப் பட்டுள்ள நிலையில், வழக்கு தொடர்பாக விரைவில் அண்ணாமலைக்கு அழைப்பாணை அனுப்பப் பட்டு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *