தோழர் செல்வராஜ் எம்.பி. மறைவிற்கு இரங்கல்

1 Min Read

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னணித் தோழரும், தேசிய குழு உறுப் பினரும், நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினருமான தோழர் எம்.செல்வராஜ் (வயது 67) இன்று (13.5.2024) விடியற்காலை 2 மணிக்குத் தனியார் மருத்துவமனையில் மறைவுற்றார் என்பதை அறிந்து பெரிதும் வருந்துகி றோம்.
50 ஆண்டு காலம் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சிறந்த பொதுநலத் தொண்டராக உழைத்தவர். நாகை மக்களவை உறுப்பினராக நான்கு முறை தேர்ந்தெடுக் கப்பட்டவர்.
எளிமையானவர் – பழகுவதற்கு இனிமையானவர். அவரது இழப்பு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிக்குப் பேரிழப்பாகும்.
அவர் பிரிவால் பெரிதும் துயருறும் குடும்பத் தாருக்கும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும் கழகத் தின் சார்பில் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

(கி.வீரமணி)
13.5.2024 தலைவர், திராவிடர் கழகம்
குறிப்பு: கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், நாகை மாவட்ட கழகத் தலைவர் வி.எஸ்.டி.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ் குப்தா, திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன், முதலியோர் கழகத்தின் சார்பில் இறுதி நிகழ்வில் பங்கேற்று மரியாதை செலுத்துவ

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *