செய்திச் சுருக்கம்

viduthalai
1 Min Read

தள்ளிவைப்பு

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று தொடங்கு வதாக இருந்தது. திடீரென 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மெரினாவில்…

சென்னை மெரினா கடற்கரையில் ரூ.8.7 கோடி செல்வில் பாய்மரப் படகு விளையாட்டு பயிற்சி மய்யத்தை தமிழ் நாடு அரசு அமைக்க உள்ளது.

வாய்ப்பு

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 5 நாள்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மய்யம் தெரிவித்துள்ளது.

ஆய்வு செய்ய…

விருது நகர் மாவட்டத்தில் விதி மீறல் பட்டாசு ஆலைகளை ஆய்வு மேற் கொள்ள 4 சிறப்பு நிலைக் குழுக்கள் நியமிக் கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தகவல்.

அதிகரிக்கும்

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் மே 15ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பையொட்டியும், ஓரிரு இடங் களில் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமா கவும் இருக்கும் என சென்னை வானிலை மய்யம் தகவல்.

நீர்மட்டம்

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் குறைந்துள்ளது. அதேசமயம் 11 மாவட்டங் களில் நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்ந் துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *