உரத்தநாடு, செப். 8- உரத்தநாடு ஒன்றிய, நகர கழக கலந்துரை யாடல் கூட்டம் 4.9.2023 அன்று மாலை உரத்தநாடு பெரியார் மாளிகையில் நடை பெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமை வகித் தார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் தஞ்சை இரா ஜெயக்குமார், திராவிடர் கழக தலைமை கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி, மாவட்ட கழக செயலாளர் அ.அருணகிரி ஆகியோர் முன்னிலை ஏற்ற னர்.
நிகழ்வில் பெரியார் அறக் கட்டளை உறுப்பினர் நெடுவை கு.அய்யாதுரை, மாநில மாண வர் கழக செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா.இராமகிருஷ் ணன் ஒன்றிய கழக தலைவர் த.ஜெகநாதன், ஒன்றிய கழக செயலாளர் மாநல். பரமசிவம், ஒன்றிய கழக அமைப்பாளர் பு.செந்தில் குமார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வே.ராஜவேல், மாவட்ட இணைச் செயலாளர் தி.வா.ஞான சிகாமணி, மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, மாவட்ட கலை இலக்கியஅணி தலைவர் வெ.நாராயணசாமி மாவட்ட பக துணைச் செயலாளர் ஆ.லெட்சுமணன், மாவட்ட மகளிர் அணி தலைவர் இ அல் லிராணி, மாவட்ட வழக்குரை ஞர் அணி செயலாளர் க.மாரி முத்து, மாவட்ட இளைஞரணி தலைவர் ரெ.சுப்பிரமணியன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பேபி ரெ. ரமேஷ், ஒன்றிய கழக துணைத் தலைவர் இரா துரைராசு, ஒன்றிய துணை செயலாளர் நா. பிரபு ஒன்றிய ப.க தலைவர் கு.நேரு, ஒன்றிய விவசாய அணி தலை வர் மா.மதியழகன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் க. அறிவரசு, தெற்கு பகுதி கழக செயலாளர் க.சுடர்வேந்தன் வடக்கு பகுதி கழக செயலாளர் ப.ராஜகோபால், நகர கழக தலை வர் பேபி ரெ.ரவிச்சந்திரன் நகர கழக செயலாளர் ரெ.ரஞ்சித்குமார், நகர கழக துணைச் செயலாளர் இரா. ராவணன், நகர கழக துணை தலைவர் மு.சக்திவேல், ஊரணிபுரம் நகர தலைவர் கக்கரை கோ.ராமமூர்த்தி,நகர இளைஞரணி தலைவர் ச. பிரபாகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் மா. சாக்ரடீஸ், நகர இளை ஞரணி துணை தலைவர் கே.எஸ்.பி. சக்கரவர்த்தி, ஒன்றிய மாணவரணி தலைவர் க.பரணி தரன், ஒக்கநாடு மேலையூர் கிளை கழகச் செயலாளர் நா. வீரத்தமிழன்,மா. தென்னகம், பொறியாளர் ப. பாலகிருஷ் ணன், ஆ.ராசாகாந்தி, செ.சாமி நாதன், பெரியார்நகர் இரா. மகேஸ்வரன், வெ.சக்திவேல், நெடுவை கு. லெனின், வெ.விமல், கண்ணை மேற்கு கிளை கழக தலைவர் அ.திருநாவுக் கரசு, வடசேரி கிளை கழகத் தலைவர் ராமசாமி, மண்டல கோட்டை செந்தில்குமார், சுரேந்தர், உரத்தநாடு இளைஞ ரணிதோழர் ராஜேஷ் உள் ளிட்ட கழகத்தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சமயன் குடிக்காடு பெரியார் பெருந்தொண்டர் கோவிந்த ராசு, வடக்கு பகுதி கழக செயலாளர் சடையார்கோவில் ப.இராஜகோபால் தந்தையார் பரமசிவம், குலமங்களம் கழகத் தோழர் கோ.வீரமணி தந்தை யார் கோவிந்தராசு, கண்ணை கிழக்கு கழகத்தோழர் அண் ணாத்துரை தாயார் மணி மேகலை ஆகியோர் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
உலகத் தலைவர் தந்தை பெரியாரின் 145ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் ஒன்றியம் முழுவதும் மோட் டார் சைக்கிள் பேரணியாக இரு குழுக்களாக சென்று அனைத்து கிளை கழகங்களி லும் கழக கொடியேற்றி விட்டு மாலை உரத்தநாட்டில் மாபெ ரும் பெரியார் பட ஊர்வலம் நடத்துவது எனவும், தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு ஒன்றியம் முழுவ தும் அனைத்து கிளைகழ கங்களிலும் பிரச்சார பொதுக் கூட்டங்களை நடத்துவது என வும், அக்டோபர் 6-தஞ்சையில் தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் தலைமையில் நடைபெறும் முத்தமிழ் அறி ஞர் கலைஞர் நூற்றாண்டுவிழா, சமூக நீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்விற்கு ஒன்றியம் முழு வதும் சுவரெழுத்து பிரச்சாரம் மேற்கொள்வது எனவும், நிகழ்வில் கழகத் தோழர்கள் திரளாக பங்கேற்பது எனவும், “தகைசால் தமிழர்” விருது பெற்ற தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களுக்கு வாழ்த்துக ளையும். விருதினை வழங்கி சிறப்பித்த தமிழ்நாடு முதல மைச்சருக்கு நன்றியையும் இக் கூட்டம் தெரிவித்துக்கொள்கி றது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துரை. தன்மானம், ஒன்றிய தலைவர், தமிழ்நாடு பெரியார் கட்டுமான அமைப்பு சாரா தொழி லாளர் நலச்சங்க, தொழிலாளர் அணி. க.சசிக்குமார், உரத்தநாடு ஒன்றிய செயலாளர், தமிழ்நாடு பெரியார் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்க, தொழிலாளர் அணி. கீழவன்னிப் பட்டு செந்தில்குமார், கிழக்கு பகுதி கழக செயலாளர்.