அண்ணாவின் படைப்புகள்

1 Min Read

அரசியல்

அண்ணா எழுதிய முதல் படைப்பாகக் கிடைப்பது ‘கொக்கரகோ’ எனும் சிறுகதை. அது ஆனந்த விகடனில் 1934ஆம் ஆண்டு பிப்பிரவரியில் வெளியிடப்பட்டது. அவர் இதழாசிரியராகப் பணியாற்றியதால் அவர் தீட்டிய இதழுரைகள் மட்டும் இண்டாயிரத்துக்கு மேற் செல்கின்றன. சொற்பொழிவுகளில் கிடைப்பவை மேடைப் பொழிவுகளாக இருநூறு சட்டமன்றச் சொற்பொழிவுகள் 1760 என்று பி.இரத்தினசபாபதி தமது ஆய்வுரையில் தொகுத்துள்ளார். அண்ணாவின் மேற்பார்வையுடன் பதிப்பிக்கப்பட்ட இலக்கியங்கள் ஆயிரத்து இருநூற்று முப்பத்தைந்து. அவை,

புதினங்கள்       :6

குறும் புதினங்கள்:18

சிறுகதைகள்        :117

மடல்கள்                :314

கட்டுரைகள்        :560

நாடகங்கள்        :13

சிறு நாடகங்கள்:73

ஊரார் உரையாடல்:26

அந்திக் கலம்பகங்கள்:31

கவிதைகள்               :77

                                   —–

                                           1235

                                    —–

பேரறிஞர் அண்ணா ஒரு நாடக அறிஞர் எனும் நூலில் அண்ணா பரிமளம், அண்ணாவின் படைப்புகள், சொற்பொழிவுகளுடன் கணக்கிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *