அன்னை நாகம்மையாரின் 91ஆம் ஆண்டு நினைவு நாள் படத்திற்கு கழகத் துணைத் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

1 Min Read

அன்னை நாகம்மையாரின் 91ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (11.5.2024) காலை 11 மணிக்கு சென்னை பெரியார் திடலில் – தந்தை பெரியார் நினைவிட வளாகத்தில் மாலை அணிவித்து வைக்கப்பட்டிருந்த அன்னை நாகம்மையார் படத்திற்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர்கள் ச. இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோரும் அன்னை நாகம்மையார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் கழகத் தோழர்களும், பெரியார் திடல் பணித் தோழர்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *