வேலூரில் சிறப்பாக நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பில் 100 விடுதலை சந்தாக்களை வழங்க முடிவு

Viduthalai
1 Min Read

வேலூர், மே 11- 6.5.2024 அன்று மாலை வேலூர் சுயமரியாதைச் சுடரொளி பழனியப்பன் அரங்கம் வலாகத் தில், (புன்னகை மருத்துவமனையில்), மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் காப்பாளர் வி.சடகோபன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் உ.விசு வநாதன் வரவேற்புரை யாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் தனது சிறப்புரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளை யை ஏற்று மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 100 விடுதலை சந்தாக்கள் வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். மாவட்ட காப்பாளர் வி.சடகோபன் தனது உரையில் விடுதலை இதழின் முக் கியத்துவத்தை கூறி சந்தாக்களை வழங்கிட வேண்டும் என வலியுறுத் தினார்.
மாவட்ட தலைவர் வி.இ. சிவக்குமார் பேசுகையில் நாம் அனைவரும் இணைந்து விடுதலை சந்தாக்களை வழங்குவோம் என்று உறுதியளித்தார்.

காப்பாளர் கலைமணி பழனி யப்பன், பொதுக்குழு உறுப்பினர் க.சிகாமணி, மாவட்ட அமைப் பாளர் நெ.கி.சுப்ரமணியம், மாநகர தலைவர் ந.சந்திரசேகர், குடியாத் தம் நகர தலைவர் சி.சாந்தகுமமார், மாவட்ட இளைஞரணி தலைவர் பொ.தயாளன்,செயலாளர் தமிழ்த்தரணி, அமைப்பாளர் சீனிவாசன், மகளிரணி செ.சுமதி, ஓவியர் தயாளன் ஆகியோர் கருத் துரையாற்றியதுடன் ஒவ்வொரு வரும் அய்ந்து விடுதலைசந்தாக்கள் சேர்த்து தருவோம் என்று உறுதி கூறி சந்தா புத்தகங்களை பெற்று மகிழ்ந்தார்கள்.
முன்னதாக மே.2இ-ல் பிறந்த நாள் விழா கொண்டாடி மகிழ்ந்த காப்பாளர் கலைமணி அம்மை யாருக்கு மாவட்ட கழக சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா. குணசேகரன் அவர்கள் பயனாடைபோர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
இறுதியாக மாணவர் கழகத் துணைத் தலைவர் வி.சி.சங்கநிதி நன்றியுரை வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *