அரக்கோணத்தில் சுயமரியாதை இயக்கம், குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா

1 Min Read

அரக்கோணம், மே 11- இராணிப் பேட்டை மாவட்டம் அரக் கோணத்தில் பழைய பேருந்து நிலையம் அருகில் 9.-5.-2024 வியா ழக்கிழமை மாலை 6.15 க்கு சுய மரியாதை இயக்கம் நூற்றாண்டு, குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திராவிடர் கழ கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் சு.லோகநாதன் தலைமையில், மாவட்ட செயலாளர் செ.கோபி, மாவட்ட அமைப்பாளர் சொ.ஜீவன் தாஸ், பொதுக்குழு உறுப் பினர் கோ.சூரியகுமார் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடை பெற்றது.
தொடக்கத்தில் ராசா நகரம் க.ஏ.தமிழ் முரசு “மந்திரமல்ல தந்தி ரமே” மேஜிக் நிகழ்ச்சியை செய்து காட்டினார்.

தொடர்ந்து ம.தி.மு.க.நெமிலி ஒன்றிய செயலாளர் கெ.ஆறுமுகம், காஞ்சி மாவட்ட இணை செயலா ளர் சீதாவரம் மோகன், தி.மு.க. பேச்சாளர் காஞ்சி சங்கர், தி.மு.க. வின் தலைமைக்கழக பேச்சாளர் தக்கோலம் தேவபாலன், அனைத்து அம்பேத்கர் இயக்கங்களின் ஒருங் கிணைப்பாளர் ஜி.மோகன், காவே ரிப்பாக்கம் மு.நகர.செயலாளர் போ.பாண்டுரங்கன், காஞ்சி தோழர் ரவிபாரதி, காஞ்சி மாவட்ட தலைவர் அ.வெ.முரளி, திருவள்ளூர் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மா.மணி, மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் ஆகியோரின் உரைக்கு பிறகு, சிறப்பாக சிறப்பு ரையை தந்தார்.
மாநில கிராம பிரச்சார குழு தலைவரும் தலைமைக்கழக சொற் பொழிவாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் சிறப்புரை ஆற்றி னார்.

நிறைவாக நன்றியுரையை க.சு.பெரியார்நேசன் கூறினார்.
நிகழ்வில் பங்கேற்றோர் திரு வள்ளூர் மாவட்ட தலைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி, திருவள்ளூர் மாவட்ட ப.க.பொறுப்பாளர் சி.நி. வீரமணி,காஞ்சி மாவட்ட செ ய லாளர் கி.இளையவேல்,பெருமூச்சி பாரதிதாசன், எஸ்.சி., எஸ்.டி., கூட்டமைப்பின் பொதுச்செயலா ளர் நைநா மாசிலாமணி, சிங்கப்பூர் சங்கர், பெரப்பேரி சங்கர், மதிமுக ஏ.ஞானப்பிரகாசம், ராணிப் பேட்டை சிப்காட் ராஜாசார், அரக்கோணம் ஏ.சு.ராஜா மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
தலைமைக்கழக அமைப்பாளர் பு.எல்லப்பன் நிகழ்ச்சியை ஒருங் கிணைத்தார். மக்கள் பாராட்டும் படி பரப்புரை அமைந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *