மறைவு

1 Min Read

திருநாகேசுவரம், தெற்குத் தெரு, மறைந்த வீராசாமி அவர் களின் துணைவியாரும், திரு நாகேசுவரம் நகர கழக செயலா ளர் வீ.திராவிடபாலு, வீ.சங்கர், வீ.பால முருகன் ஆகியோரின் தாயாருமான வீ.கோவிந்தம்மாள் 10.5.2024 மதியம் 2.30 மணியள வில் மறைவுற்றார் என்பதை அறி விக்க வருந்துகிறோம்.
இன்று (11.5.2024) இறுதி நிகழ்வு நடைபெற்றது. குடந்தை மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி தலைமையில் கழகத்தினர் இறுதி மரியாதை செலுத்தினர். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தோழர் திராவிட பாலுவிடம் தொலைப் பேசி வழியாக ஆறுதல் தெரிவித்தார்.

– – – – –
மறைவு

மறைவு

தந்தை பெரியார் அவர்களு டன் 18 ஆண்டுகள் சுற்றுப்பயண வண்டியில், சுவடி விற்ற கோடி யக்கரை வீர.சுப்பிரமணியன் வாழ்விணையர் வேதலட்சுமி அம்மையார் (வயது 83) நேற்று (10.5.2024) மாலை 5 மணியள வில் வயது மூப்பின் காரணமாக மறைவுற்றார்.
1958இல் தந்தை பெரியார் கோடியக்கரைக்கு நேரில் வந்து இவர்களது திருமணத்தை நடத்தி வைத் தார். தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் மீது அளவு கடந்த பாசமுடையவர். இவரது பிள்ளை கள் காமராஜ், ஜவஹர்லால், பெரியார் செல்வி, இந்திரா காந்தி ஆகியோர் இவரைக் காத்து வந்தனர்.
கழக காப்பாளர் கி.முருகையன் மற்றும் தோழர்கள் உடன் சென்று மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *