9.5.2024 அன்று வடைக்கடைக்கு விடுமுறையா? 10 ஆண்டுகளில் மோடி பொய் பேசாமல் இருந்த நாள்

1 Min Read

மோடி 2014ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததில் இருந்து நாள் தோறும் ஏதாவது ஒன்றைக் கூறுவார், மேடையில் பேசுவார், காணொலியில் பேசுவார், மன்கிபாத் பேசுவார், அல்லது சமூக வலைதளங்களில் எழுதுவார், கரோனா முழு அடைப்பு காலத்தில் கூட நாள்தோறும் சமூக வலைதளம் மூலமாக பேசிக் கொண்டு தான் இருந்தார்.

இதில் ஒன்று கூட உண்மையானதாக இருக்காது. இதில் ஒரு வியப்பு என்ன வென்றால் அவர் உண்மைக்குப் புறம் பான தகவலைக் கூறிய உடனேயே சமூக வலைதளங்களில் அவர் கூற்று தவறானது என்று உடனடியாக பதில் வரும். இருப்பினும் அவர் இதைக் கடந்து அடுத்த பொய்யான தகவலைக் கூறச் சென்று விடுவார்.

10 ஆண்டுகளாக இதே நிலைதான். ஆனால், 09.05.2024 அன்று மிகவும் முக்கியமான நாள்.
காரணம் அன்றைய நாள் மோடியின் சமூக வலைதளக் கணக்கில் இருந்தோ, அல்லது வேறு எந்த ஒரு ஊடகத்தளத்தின் மூலமோ அவர் பேசவே இல்லை. அவரது அனைத்து தேர்தல் நாள் பரப்புரைகளும் ரத்து செய்யப்பட்டன.
அவர் பேசுவதாக இருந்த மேடை களில் அமித்ஷாவும், ராஜ்நாத் சிங்கும் பேசிக்கொண்டு இருந்தனர். ஆகவே 09.05.2024 அன்று இந்தியாவின் உண்மைக்கான நாள் என்றே கூறலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *