பெரியார் வாழ்கிறார்!

Viduthalai
1 Min Read
இப்போதெல்லாம்
குப்பனையும் சுப்பனையும்
கோவில்களுக்குள்
காண முடிகிறது
பொட்டுக்கட்டி விடப்பட்டிருந்த
பொன்னுத்தாயின் பேத்தி
லண்டனில்
பிசியோதெரபி படிக்கிறாள்
வியாதி என்றதும்
மந்திரித்து
தாயத்துக் கட்டிய கைகளில்
மருந்துச் சீட்டுகள்
மாவட்ட ஆட்சியர் மாடசாமியிடம்
கையெழுத்திட வேண்டிய கோப்புகளைப்
பணிவோடு காட்டுகிறார்
கணேச அய்யர்
வெண்டைக்காயை ஒடித்துப் பார்த்தும்
தேங்காயைத் தட்டிப் பார்த்தும்
கொள்முதல் செய்யும் கணவர்கள்
காய்கறிச் சந்தைகளில்
மொட்டை போட்டிருந்த
நண்பன் ஒருவனிடம்
கோவிலுக்கா என்றேன்
சம்மருக்கு என்றான் சாதாரணமாக
மேலத் தெருவில்
கீழத் தெருக்காரர்களின்
பாலிஷ் செய்யப்பட்ட
பாதுகைகளின் தடங்கள்
வெண்ணிலாவின்
மதிப்பெண் அட்டையில்
அம்மா பெயரின் முன்னெழுத்தும்
மின்னிச் சிரிக்கிறது
கழுத்துக் கயிற்றின்
மதச் சின்னங்கள்
காலாவதி ஆகிப் போய்
சில்வர் செயினில்
‘லிஷீஸ்மீ’ ‘சிஷீஷீறீ’ வாசகங்கள்
தொலைக்காட்சியின்
சமையல் நிகழ்ச்சிகளில்
தொகுத்து வழங்கும் பெண்களையும்
சமைத்துக் காட்டும் ஆண்களையும்
எவரும் விகாரமாய்ப் பார்ப்பதில்லை
சாலைகளில் முளைத்த
‘வழி’பாட்டுத் தலங்கள்
அவ்வப்போது
நகராட்சியின் புல்டோசருக்கு இரையாகிறது
மதத்தை ஜாதியை முன்னிறுத்தும்
அரசியல் அமைப்புகள் யாவும்
பெரியாரின் மண்ணில்
மண்ணையே கவ்வுகின்றன ….
– சமூக வலைதளத்திலிருந்து…
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *