சென்னையில் நாய்களுக்கு உரிமம் பெற 1,390 பேர் விண்ணப்பம்

1 Min Read

சென்னை, மே 10 சென்னை மாநகராட்சி கால்நடை மருத்துவ அலுவலர் ஒருவர் கூறியதாவது:-
வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு உரிய உரிமம் பெறப்பட்டுள்ளதா என்று மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்யப்ப டுகிறது. சிறுமியை நாய் கடித்த சம்பவத்திற்கு முன், அதாவது 5-ஆம் தேதிக்கு முன்பு வரை 397 பேர் மட்டுமே உரிமம் கோரி விண்ணப்பித்து இருந்தனர்..
சென்னை மாநகராட்சியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து, கடந்த 3 நாட்களில் மட்டும் 1,390 விண்ணப்பங்கள் பெறப்பட் டுள்ளன. இதில், 280 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பெறப்பட் டுள்ள விண்ணப்பங்களை தீவிரமாக ஆய்வு செய்து முறையான ஆவணங்கள் பெற்ற வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கி வருகிறோம். பதிவேற்றம் செய்யும் போது நாயின் ஒளிப்ப டம், வயது, இனம், ரேபிஸ்நோய் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் ஆகியவற்றை குறிப்பிட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும். 20 ஆயிரம் பேர் வரை விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *