மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசும் பிரதமர் மோடிமீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மே 10- தேர்தல் பிரச்சாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், மதக் கலவரத்தை உண்டாக்கும் நோக் கிலும் பேசி வரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தர விடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காங் கிரஸ் கமிட்டி சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டது.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி, தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் அவர் மீது தேர்தல் ஆணையம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், மதக் கலவரத்தை உண்டாக்கும் நோக்கிலும் பேசி வரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை சார்பில் அவசர முறையீடு செய்யப்பட் டது. இதனை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ்சந்திரா, கலைமதி அமர்வு, மனுவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், வழக்கில் பிரதமர் பெயரை சேர்த்திருப்ப தால், அதனை பட்டியலிட நீதி மன்றம் மறுப்பதாக காங்கிரஸ் வழக்குரைஞர்கள் குற்றம் சாட் டியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *