ஊற்றங்கரை, மே 9- ஊற்றங்கரை ஆர்.பி.எஸ். மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 7-5-2024 முதல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை தெளிவுப்படுத்தி இருந்த நிலையில் அரசு உத்தரவுக்கு எதிராகவும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாகவும் ஊற்றங்கரை ஆர்.பி.எஸ். மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடந்து வரும் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்பினை தடுத்து நிறுத்த வேண்டியும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து பள்ளியின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிற சூழலில் பொது அமைதி காக்க காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி ஊற்றங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்களை திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் தலைமையில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது
திராவிடர் கழக மாவட்ட தலைவர் கோ.திராவிடமணி, மாவட்ட செயலாளர் செ.பொன்முடி, பொதுக்குழு உறுப்பினர் பழ,பிரபு மாவட்ட துணைத் தலைவர் வண்டி. ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் செ.சிவராஜ், திராவிட முன்னேற்ற கழக நகர அவைத்தலைவர் சு.தணிகை குமரன், திமுக தொழில் நுட்ப அணியின் மாவட்ட துணைத் தலைவர் காளிதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலர் வே.குபேந்திரன், மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளரணியின் துணை பொறுப்பாளர் கோ.அசோகன், சி.பி.எம். கட்சியின் பொறுப்பாளர் லெனின் உள்ளிட்ட பலரும் உடனிருந்து களப்பணியை மேற் கொண்டனர்.
ஊற்றங்கரை ஆர்.பி.எஸ். தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்பு உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரி காவல் துறைக்கு அனைத்துக்கட்சியினர் மனு
Leave a comment