சென்னை ராணி மேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலை முதலமைச்சர் திறந்து வைத்தார்

Viduthalai
1 Min Read

சென்னை, செப். 9-  சென்னை ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூரின் முழு உருவச் சிலையை மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார். இது தொடர்பாக தமிழ்நாடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சென்னை, ராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் முழு உருவச் சிலையை நேற்று  (8.9.2023) திறந்து வைத்தார். கவிஞர் ரவீந்திரநாத் தாகூருக்கு பெருமை சேர்க்கும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், “இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவரும், இந்தியத் திருநாட்டின் தேசிய கீதத்தை இயற்றியவருமான வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூருக்கு சென்னை, ராணி மேரி கல்லூரியில் முழு உருவச் சிலை அமைக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை, ராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் முழு உருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலு, இ.பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகரராஜா, துணை மேயர் மகேஷ்குமார், கோவை மேனாள் மாநகராட்சி மேயர் ஆர்.வெங்கடாசலம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் இரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *