அமைச்சர்கள் விடுதலையானதை தாமாக முன்வந்து விசாரிக்கும் போக்கு

Viduthalai
3 Min Read

உயர் நீதிமன்றத்திற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு

அரசு, தமிழ்நாடு

சென்னை, செப். 9- சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் க.பொன்முடி விடுதலை செய்யப் பட்டதை எதிர்த்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்ததற்கு 

க.பொன்முடி மற்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து இந்த வழக்கை தானே விசாரிப்பதா அல்லது வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதா என்பது குறித்து செப். 14ஆ-ம் தேதி முடிவெடுக்கப்படும், என தெரிவித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

கடந்த 1996 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச் சராக பதவி வகித்த, தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி சொத்துக் குவிப்பில் ஈடுபட் டுள்ளதாகக் கூறி அவர் மீதும், அவருடைய மனைவி விசா லாட்சி, மாமியார் சரஸ்வதி மற்றும் நண்பர்கள் உள்ளிட் டோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2002ஆ-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. 

விழுப்புரம் மாவட்ட நாடா ளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத் தில் நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டது. அதன்படி இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதி மன்றம், இந்த வழக்கில் இருந்து அமைச்சர் க.பொன்முடி உள்ளிட் டோரை விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் வகையில் உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்க டேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, இதுதொடர்பாக பதிலளிக்க அமைச்சர் க.பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தாக் கீது பிறப்பித்திருந்தார். 

அதன்படி இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்க டேஷ் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான டில்லி மூத்த வழக்குரைஞர் சித்தார்த் லுத்ரா, அமைச்சர் க.பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக் குரைஞர் என்.ஆர்.இளங்கோ, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் தங்களது வாதத்தில், இந்த வழக்கை விழுப் புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற் றியது தொடர்பாக உயர் நீதி மன்றம் நிர்வாக ரீதியாக பிறப்பித்த முடிவுகள் குறித்து இந்த நீதிமன்றம் தனது உத்தர வில் கூறியிருப்பதால் இந்த வழக்கில் உயர் நீதிமன்ற பதிவுத் துறையையும் எதிர் மனுதா ரராகச் சேர்த்திருக்க வேண்டும். 

ஆனால் அவ்வாறு சேர்க்க வில்லை. அல்லது தாமாக முன் வந்து இந்த வழக்கை விசார ணைக்கு எடுக்கும் முன்பாக லஞ்ச ஒழிப்புத்துறையின் விளக் கத்தையாவது கேட்டிருக்க வேண் டும். அதையும் செய்யவில்லை.

கடந்த ஜூன் மாதம்தான் இந்த வழக்கில் வேலூர் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு இன்னும் அவகாசம் இருப்பதை இந்த நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. இந்த வழக்கு ஏற்கெனவே முன்கூட்டியே தீர் மானித்து எடுத்ததுபோல் உள் ளது.

பொதுவாக தாமாக முன் வந்து விசாரணக்கு எடுக்கப்படும் வழக்குகளை தலைமை நீதி பதிக்கு பரிந்துரைக்க வேண்டும். அந்த வழக்கை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதிதான் முடிவு செய்வார். ஆனால் இந்த வழக்கில் நடைமுறை வழக்கத் தைத் தாண்டி தலைமை நீதி பதியின் பார்வைக்காக மட்டுமே அனுப்பி வைக்க உத்தரவிடப்பட் டுள்ளது. இந்த வழக்கை இந்த நீதிமன்றமோ, நீங்களோ விசா ரிக்க அதிகாரம் கிடையாது. 

எனவே இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும். வழக்கு விழுப்புரத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற் றப்பட்ட உயர் நீதிமன்றத்தின் நிர்வாக முடிவுக்கும், அமைச்சர் பொன்முடிக்கும் எந்த சம்பந்த மும் இல்லை. அதுதொடர்பான ஆவணங்களும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட் டனர்.

அதையடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கை தானே விசாரிப்பதா அல்லது வேறு நீதி பதிக்கு மாற்ற தலைமை நீதி பதிக்கு பரிந்துரைப்பதா என்பது குறித்து செப்.14-ஆம் தேதி முடிவு செய்யப்படும் எனக்கூறி விசார ணையை தள்ளி வைத்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *