இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸனாதனம் மற்றும் அதன் கொடுமைகளை துணிச்சலோடு எடுத்தாண்டு அதன் கொடூர முகத்தை ஒரு முக்கிய தளத்தில் இந்தியா முழுவதும் விவாதப் பொருளாக மாற்றி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு நன்றி தெரிவித்த குண்டூர் மாவட்ட பாப்பட்லா நகரைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக அமைப்பினர் உதயநிதி ஸ்டாலின் படத்தை எடுத்துக்கொண்டு ஊர்வலமாகச் சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து உதயநிதி ஸ்டாலினின் ஸனாதனத்திற்கு எதிரான பணி மேலும் வீரியத்துடன் தொடரட்டும் – தெலங்கானா, ஆந்திராவின் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் அவர் பின்னால் நிற்கிறோம் என்று முழக்கமிட்டனர்.