தமிழ்நாட்டில் சீராக மின்சாரம் விநியோகம் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

viduthalai
2 Min Read

சென்னை, மே 8- தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங் கப்படுகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கை:
கடந்த ஆட்சி காலத்தில், தமிழ் நாட்டின் டெல்டா பகுதியில் 12 மணி நேரமும், பிற பகுதிகளில் 9 மணி நேரமும் மட்டும் தான் மும்முனை மின் சாரம் என்று இருந்த நிலையை மாற்றி, உழவர்களின் நலனை எப்பொழுதும் முதன்மையாக கருதக்கூடிய முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த 2021இல் பதவியேற்றது முதல், விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம், நாள் ஒன்றிற்கு 12 முதல் 16 மணி நேரம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் மின்சார பயன் பாடும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக, டெல்டா மாவட்டங் களில் இரவு நேரங்களில் விவசாய மின்சார இணைப்புகளின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் ஒரு சில பகுதி யில் உயரழுத்த மின் கட்டமைப்புகளில் அவ்வப்போது சில இடையூறுகள் ஏற்படுகிறது.

இதை முற்றிலுமாக நிவர்த்தி செய்து, அதிகப்படியான நேரம் மும் முனை மின்சாரம் வழங்கிட தேவை யான அனைத்து மேம்பாட்டு பணிக ளும், போர்க்கால அடிப்படையில் நடக்கின்றன.
தமிழ்நாட்டில் நிலவி வந்த குறைந்த மின் அழுத்தம் இடர்களைக் களையும் பொருட்டு, ஒருங்கிணைந்த மேம் பாட்டு திட்டம் ஜூலை 2021இல் வகுக் கப்பட்டு தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இதில் 5,705 இடங்களில் உள்ள மின்மாற்றிகளில் மின்சுமை அதிகமாக உள்ளது எனவும் 3,200 இடங்களில் மின்மாற்றிகளில் குறைந்த மின்னழுத் தம் நிலவுவதாகவும் மொத்தம் 8,905 இடங்களில் கண்டறியப்பட்டது.

இவற்றில் திருச்சி, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மண்டலங்களில் அதிக அளவில் மின்மாற்றிகளின் மின் சுமை அதிகமாகவும், குறைந்த மின்ன ழுத்தம் நிலவுவதாகவும் தெரிய வந்தது.
குறைந்த மின்னழுத்தத்தை சரி செய்வதற்கு கூடுதலாக 3,200 புதிய மின் மாற்றிகள் நிறுவியதன் மூலம் தாழ் வழுத்த மின்பாதையின் நீளம் குறைந்து மின்னிழப்பு வெகுவாகக் குறைந் துள்ளது.

தற்பொழுது, கிராமப்புறங்கள் உள் பட கடைமுனை நுகர்வோர் வரை அனைத்து நுகர்வோர்களுக்கும் சீரான மின்னழுத்தத்தில் மின்விநியோகம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்க 24 மணி நேரமும் மும்முனையில் இயங்கக்கூடிய தனித்த மின் பாதையின் வாயிலாக தடையில்லா சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, கடந்த 3 ஆண்டுகளாக, மின்சாரத்துறையில் மேற்கொண்டு வரும் சீரிய நடவடிக்கைகளின் பயனாக, தமிழ்நாட்டில் விவசாயத்திற்கும், குடி நீருக்கும் மட்டுமல்லாமல் அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *