கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை
தாம்பரம், மே 8- தாம்பரம் மாவட்ட கழக சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மற்றும் குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் 3.5.2024 அன்று மாலை 6.30 மணியளவில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன் தலைமை வகிக்க தாம்பரம் மாவட்ட கழக செயலாளர் கோ.நாத்திகன் வரவேற்புரை ஆற்றினார்.
முதலில் பேசிய சோழிங்கநல்லூர் மாவட்ட செயலாளர் விஜய் உத்தமன் ராஜ் பேசுகையில், ஒரு மனிதருக்கு சுயமரியாதை எவ்வளவு அவசியமானது என்றும் தந்தை பெரியார் திராவிட இனத்தின் முன்னேற்றத் திற்காக எவ்வாறெல்லாம் பாடுபட்டார் என் றும் பேசினார். அடுத்து உரை நிகழ்த்திய பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் ந.கரிகாலன் பேசுகையில், ‘‘இன் றைய சூழலில் குடிஅரசு இதழும் தந்தை பெரியாரும் எவ்வாறு தேவைப்படுகிறார்கள்” என்று பேசினார்.
தொடர்ந்து உரை நிகழ்த்திய தி.மு.கழக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆதிமாறன் பேசுகையில், தந்தை பெரியார் அவர்களுக்கு முன் தமிழ்நாட்டின் நிலை என்ன என்றும் பெரியாருக்குப் பின் சமுகநீதி அடிப்படையில் தமிழ்நாடு எவ்வாறு வளர்ச்சி அடைந்தது என்றும் நாங்களெல்லாம் நன்றி கடன் செலுத் தவே இந்தப் பொதுக்கூட்டத்திற்கு வந்துள் ளோம் என்றும் கூறினார்.
தொடர்ந்து உரை நிகழ்த்த வந்த தாம்பரம் மாவட்ட கழக இளைஞரணி தலைவர்
ஆ.இர.சிவசாமி பேசுகையில், மனு தர்மம் எவ்வாறு மனிதர்களை வஞ்சித்தது என்றும் அந்த மனு இழிவிலிருந்து தந்தை பெரியார் நம் மக்களை எவ்வாறு மீட்டார் என்பதை பற்றியும் பேசினார். தொடர்ந்து உரை நிகழ்த்த வந்த ம.தி.மு.க செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் ம.வை.மகேந்திரன் பேசுகையில், திருச்சி திருவரங்கம் அரங்கநாதர் கோயி லுக்கு அருகில் அமைந்துள்ள தந்தை பெரி யார் அவர்களின் சிலை பற்றியும் ஆரியர் களின் சூழ்ச்சி பற்றியும் விளக்கமாக எடுத் துரைத்தார்.
தொடர்ந்து உரை நிகழ்த்த வந்த கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பேசுகையில், 1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடை பெற்ற காங்கிரஸ் மாநாட்டிலே சமூக நீதிக்கான குரல் நசுக்கப்படுகிறது என அறிந்த பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளி யேறி ஏறத்தாழ அய்ம்பது ஆண்டுகள் சமூக நீதிக்காக, சம உரிமைக்காக, சுயமரியாதைக் காக போராடுவதையே தன்னுடைய இறுதி இலக்காக கொண்டு போராடினார். தந்தை பெரியார் அவர்கள் பட்டம் வேண்டும்,பதவி வேண்டும், பணம் வேண்டும்,சொகுசு வேண் டும் என்று நினைத்திருந்தால் இன்றைக்கு நாம் பெற்றிருக்கிற வாய்ப்பு வசதிகள், உரிமைகள் ஒருபோதும் நமக்கு கிடைத் திருக்காது, தான் வகித்த 29 பதவிகளையும் தூக்கி எறிந்து விட்டு திராவிட சமுதாயத்தை உலகில் உள்ள மற்ற சமூகங்கள்போல மான மும் அறிவும் உள்ள சமுதாயமாக மாற் றும் நோக்கில் அவர் உழைத்ததன் காரணமாகத் தான் இன்றைக்கு நாம் உருப்பெற்றிருக்கிறோம், மனிதராகியிருக்கிறோம் என்று பேசினார்.
தொடர்ந்து பேச வந்த ம.தி.மு.க கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வந்தியத்தேவன் பேசுகையில், நான் திராவிடர் கழகத்தில் இளம் பருவத்தில் பயணித்த காலத்தில் கவிஞர் அவர்கள் தன்னை எவ்வாறு சரி யான பாதையில் பயிற்றுவித்து கொண்டு சென்றார் என்பதையும் அந்த காலகட்டத்தில் ரயில் நிலைய உணவகங்களில் பார்ப்பனர்கள் அனுமதிக்கப்பட்டனர். சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும் உள்ளே அனுமதி இல்லை என்று வெளியே பலகையில் எழுதி போடப் பட்டு இருந்த காலம் இருந்தது. ஆனால், இன்றைக்கு அந்த நிலை ஒழிக்கப்பட்டு உள்ளதென்றால் அதற்கு தந்தை பெரியார் தீர்மானம் போட்டு, போராட்டம் நடத்தி, அதன் பிறகுதான் நம்முடைய மக்கள் உள்ளே சென்று சாப்பிட முடிந்தது என்று சொன்னால் அதற்கு காரணம் அறிவாசான் தந்தை பெரியார்தான் என்றும் பேசினார்.
தொடர்ந்து சிறப்புரை ஆற்ற வந்த கழக துணை தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசுகையில் 1899 இல் நாடக சபைகளில் பஞ்சமர்களுக்கு இடமில்லை என்று இருந்த காலம் அது. ஆனால், அதெல்லாம் மாறி இன்றைக்கு ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்று சொன்னால் தானாக வரவில்லை அதற்கான போராட்டங்கள்,எதிர்ப்புகள், தியா கங்கள் இவற்றையெல்லாம் தாண்டித்தான் நிகழ்ந்திருக்கிறது. அதுமட்டுமின்றி தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக வேண்டும் என தந்தை பெரியார் எடுத்த முயற்சியை பற்றி விவரித்தார். பின்னர் ராஜகோபாலாச்சாரி யார் காலத்தில் பள்ளிக் கூடங்கள் மூடப் பட்டதை பற்றியும் குலக் கல்வித் திட்டத்தை புகுத்தி, ஜாதி வாரியாக மாணவர்களுக்கு குலத் தொழிலை போதித்து அவர்களை கல்வி பெறாமல் செய்த ஆரிய சூழ்ச்சியை பெரியார் வீழ்த்திய வரலாற்றை எடுத்துரைத் தார். பின்னர் ஜாதியை பாதுகாக்கும் சட் டங்களை கொளுத்துவது என பெரியாரால் முன்னெடுக்கப்பட்ட சட்ட எரிப்பு போராட்டத் தையும், அதற்கு தண்டனையாக கொடுக்கப் பட்ட மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
கலந்து கொண்டவர்கள்
சா.தாமோதரன், ஆர்.டி.வீரபத்ரன், இறைவி, மு.நாகவல்லி, இரா.சு.உத்ரா பழனிச் சாமி, பசும்பொன், பூவை செல்வி, க.வெண் ணிலா, அருணா பத்மாசுரன், ஆர்.திவ்யா, லோகவல்லி, பி.சி.ஜெயராமன், ந.கரிகாலன், எஸ்.ஆர்.வெங்கடேஷ், மா.குணசேகரன், க.தமிழ்ச் செல்வன், பெரியார் மாணாக்கன், விக்கி, ஆ.விஜய், படப்பை சந்திரசேகர், கி.ஏழுமலை, சி.பி.சந்திர சேகரன், இரா.அருள், ச.ச.அழகிரி, சண்.சரவணன், சி.சிவாஜி, மு.திருமலை, கூடுவாஞ்சேரி மா.ராசு, வழக்குரைஞர் சு.ந.விவேகானந்தன், ப.ரங்கநாதன், இனமாறன், கோவன் சித்தார்த், பிரீத்தா, பொற் செழியன், குமார், எம்.கருணாநிதி, ஆர்.அஸ்வின், விஜயகுமார், அ.கி.விஜயகுமார், ஜவகர், சிவா,
கு. நா.ராமண்ணா, சீ.லட்சுமிபதி, கதிர்வேல், ந.கதிர வன், கண்ணன், ஆர்.சேகர், சு.ராஜன் ஜேம்ஸ், கோ.அம்பேத், ஏ.புருஷோத்தமன், இரா.ராக தேவன், பெரியார் பிஞ்சு வி.அகிலன் உள்பட ஏராளமானவர்கள் கூட்டத்தில் கலந்தகொண்டனர்.நிறைவாக தாம்பரம் நகர கழக செயலாளர் சு.மோகன்ராஜ் நன்றி கூறினார்.