ஊற்றங்கரை அருகே, கிருட்டிணகிரி முக்கிய சாலையில் உள்ள ஆர்.பி.எஸ். மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நேற்றுமுதல் (7.5.2024) தொடங்கி நடைபெற்று வருகிறது.
மூன்றுமுறை தடை செய்யப்பட்ட மதவெறியைத் தூண்டும் ஓர் அமைப்பின் பயிற்சியை அனுமதிக்கலாமா?
இதற்குமுன் சில பள்ளிகளில் இத்தகைய பயிற்சி முகாம்கள் நடைபெற்ற போது, கல்வித் துறையும், காவல்துறையும் தலையிட்டுத் தடுத்து நிறுத்தப்பட்டதுண்டு.
இந்த நிலையில், ஊற்றங்கரை அருகே நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; இல்லையேல், அனைத்துக் கட்சியினரையும் ஒருங்கிணைத்துப் போராடும் நிலை ஏற்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்