பொன்னாரின் நான்கு தலைமுறை உறுதி ஒரு தலைமுறையிலேயே தகர்ந்தது!

1 Min Read

மார்த்தாண்டம் மே 7- பொன் ராதாகிருஷ்ணன் ஒன்றிய அமைச்சராக இருந்த போது போது தனது நாடாளுமன்ற தொகுதி நிதியில் இருந்து மார்த்தாண்டம் இரும்பு மேம்பாலம் சீர்படுத்தப் பட்டது. இது கட்டப் பட்டு திறந்த சில நாட் களிலேயே ஆட்டம் காணத்துவங்கியது. இதனால் வாகனங்கள் மிகவும் மெதுவாக செல் லும் நிலை ஏற்பட்டது.

இது தொடர்பாக 14.11.2018 அன்று நாளிதழ் ஒன்றில் பொன் ராதாகிருஷ்ணன் மார்த்தாண்டம் மேம் பாலம் நவீன தொழில் நுட்பத்துடன் அமைக் கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் 9ஆவது தூண் அதிர்வதாக சிலர் சமூக வலை தளங்களில் பொய்யான தகவலை பரப்புகின்றனர். பாலம் இடிந்து விழப் போகிறது என்றும் பீதியை கிளப்பி வருகின்றனர். இதனை யாரும் நம்ப வேண்டாம். தொடர்ந்து வதந்திகள் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த பாலம் நான்கு தலைமுறைகளுக்கு மேல் மக்கள் பயன்படும் விதத் தில் அமைக்கப்பட்டுள் ளது என்று கூறியிருந் தார்.

இந்த நிலையில் மார்த்தாண்டம் இரும்பு மேம்பாலத்தில் கான் கிரீட் உடைந்து விழுந்து பள்ளம் ஏற்பட்டது நான்கு தலைமுறைக்கு பெயர் சொல்லும் என்று கூறி பொன் ராதாகிருஷ் ணனால் திறந்துவைக்கப் பட்ட அப்பாலம் ஒரு தலைமுறையே காண்ப தற்குள் கான்கிரீட் பெயர்ந்து விழுந்துள்ளது வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் அச்சமடைய செய்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *